Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 269


கீதையில் சில சொற்றொடர்கள் - 269


अयुक्तः प्राकृतः स्तब्धः शठः नैष्कृतिकः अलसः विषादी दीर्घसूत्री कर्ता तामस .. (अध्याय १८ - श्लोक २८)
அயுக்தஹ் ப்ராக்ருதஹ் ஸ்தப்தஹ ஶடஹ நைஷ்க்ருதிகஹ அலஸஹ விஷாதீ தீர்கஸூத்ரீ கர்தா தாமஸ ..  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 28)
Ayukthah Praakruthah Stabdhah Shathah Naishkruthikah Alasah Vishaadhee Deergha Sootri Kartaa Taamasa ..  (Chapter 18 - Shlokam 28)

அர்தம் :  விழிப்புணர்வு இல்லாதவன் , பண்படாதவன் , முரடன் , வறட்டுப் பிடிவாதம் கொண்டவன் , சதிகள் தீட்டுபவன் , சோம்பேறி , வருத்தம் நிறைந்தவன் , தள்ளிப் போடுபவன் , தாமஸ கர்தா ..

மோஹம் , மூடநிலை , அறியாமை , சோம்பல் , மயக்கம் ஆகியவை தாமஸனின் அடையாளங்கள் ..  தாமஸ கர்தாவைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிடும் லக்ஷணங்கள் அனைத்தும் இத்தாமஸத் தன்மைகளின் வெளிப்பாடுகளே ..  அயுக்தஹ ...  யோகம் அற்றவன் .. செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை பற்றி அறியாதவன் ..  அயுக்தஹ என்றால் கவனம் இல்லாதவன் , ஶ்ரத்தை இல்லாதவன் என்றும் அர்தம் ஆகும் ..

ப்ராக்ருதஹ ..  பட்டிக்காட்டான் என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்களே !!  பண்படாதவன் , கல்வி இல்லாதவன் .. ப்ரக்ருதி என்றால் இயற்கை ..  ப்ராக்ருதன் என்றால் உலகில் எப்படி வந்தானோ அப்படியே உள்ளவன் ..  உலக வ்யவஹாரம் அறியாதவன் ..

ஸ்தப்தஹ :  முரட்டுத்தனம் அல்லது ஜட நிலை .. பணிய முடியாத விறைப்பு ..  ஆணவத்தால் ஏற்பட்ட விறைப்பு இல்லை ..  சிந்தனை இல்லாததால் ஏற்பட்டது .  ஸ்தம்பித்தது போன்ற நிலை ..

ஶட :  வறட்டுப் பிடிவாதம் ..  வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றையே பிடித்திருப்பவன் ..

நைஷ்க்ருதிகஹ :  கேடுகள் செய்பவன் ..  நேர்மை இல்லாதவன் ..  சதிகள் தீட்டுபவன் ..

அலஸஹ :  சோம்பல் நிறைந்தவன் ..  தான் செய்ய வேண்டியதை அறியாதவன் ..  அறிந்திருந்தாலும் பின்பற்றாதவன் ..  தன் ஜாதி , வர்ணத்திற்கேற்ற கர்மங்கள் ..  உலக வாழ்க்கைக்கு ஏற்ற கர்மங்கள் ..  இவற்றைச் செய்யாமல் வீண் அரட்டையிலும் , சோம்பலிலும் , தூக்கத்திலும் , வெற்றுப் பொழுதுபோக்குகளிலும் நேரத்தைக் கடத்துபவன் ..

விஷாதி :  ஶோகத்தில் மூழ்கி இருப்பவன் ..  அந்யரின் நல்ல நிலையை , தன் அவல நிலையை நினைப்பதால் ஏற்படும் ஶோகம் ..  எனினும் , இந்நிலையை மாற்றிக் கொள்ள இயலாதவன் தாமஸன் ..

தீர்க ஸூத்ரீ :  தள்ளிப் போடுபவன் ..  பிறகு செய்யலாம் என்று நினைத்து தத்க்ஷணத்தை கடத்துபவன் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...