Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 275


கீதையில் சில சொற்றொடர்கள் - 275


यया स्वप्नं भयं शोकं विषादं मदं न विमुञ्चति दुर्मेधा धृतिः सा तामसी ..  (अध्याय १८ - श्लोक ३५)
யயா ஸ்வப்னம் பயம் ஶோகம் விஷாதம் மதம் ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி ஸா தாமஸி ..  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 35)
Yayaa Swapnam Bhayam Shokam Vishaadam Madam na vimunchati Durmedhaa Dhrutih saa Taamasi .. (Chapter 18 - Shlokam 35)

அர்தம் :  எந்த உறுதியால் அக்ஞானியால் கனவு , பயம் , ஶோகம் , குழப்பம் மற்றும் ஆணவம் இவற்றை விட முடிவதில்லையோ , அதுவே தாமஸ த்ருதி ..

நெடுநீர் மறவி மடி துயில் இவை நான்கும்
கெடுநீரான் காமக்கலன் ... என்றார் ஸ்ரீ வள்ளுவர் ..  "தூக்கம் எனக்குத் தடையாக இருக்கிறது ..  என்னுள் ஆழப் பதிந்திருக்கும் சோம்பலும் தள்ளிப் போடுதலும்  வளர்ச்சியை பாதிக்கிறது" என்பதை உணர்ந்தாலும் தாமஸனால் அவற்றை உதறித் தள்ள முடிவதில்லை ,,  அவனுள் இருக்கும் த்ருதி சோம்பலையும் மற்ற தாமஸத் தன்மைகளையும் இறுகப் பற்றுகிறது ..  இது தாமஸ த்ருதி ஆகும் ..  இதுவும் மன உறுதியே ..  ஆனால் , தாமஸ உறுதி ..

அதே போல , பயம் , துயரம் , குழப்பம் மற்றும் ஆணவம் போன்ற தன்மைகள் தன்னுள் வேர் விட்டு நிலைத்திருக்கிறது என்பதை தாமஸன் அறிந்து இருக்கிறான் ..  உலக வாழ்க்கையில் இவை தனக்கு பாதகமாக இருப்பதையும் அறிந்தே இருக்கிறான் ..  எனினும் , தாமஸன் இவற்றுக்கு எதிராகப் போராடுவதில்லை ..  இவற்றைக் களைந்து எறிந்திட முயல்வதில்லை ..  இவற்றைத் தன் ஸ்வபாவமாக , ரக்தத்துடன் கலந்து விட்ட ஸ்வபாவமாக , மாற்ற முடியாத இயல்பாக ஏற்றுக் கொண்டு விடுகிறான் ..  இத்தன்மைகளும் இவனுள் உறுதியாக நிலைத்து விடுகின்றன ..  அவை இவனைப் பற்றி உள்ளனவா இவன் அவற்றைப் பற்றி உள்ளானா என்று அறிய முடியாத அளவிற்கு இறுக்கம் ஏற்பட்டு விடுகிறது ..  இந்த உறுதியே தாமஸ த்ருதி ஆகும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...