Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 277


கீதையில் சில சொற்றொடர்கள் - 277


यत्तदग्रे विषमिव परिणामे(S)मृतोपमम् तत्सुखं सात्त्विकम् ..  (अध्याय १८ - श्लोक ३६)
யத்தத் அக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம் தத் ஸுகம் ஸாத்விகம் ..(அத்யாயம் 18 - ஶ்லோகம் 36)
Yat Tadagre Vishamiva Parinaame Amrutopamam Tat Sukham Saattvikam .. (Chapter 18 - Shlokam 36)

அர்தம் :  ஆரம்பத்தில் விஷம் போல இருந்தாலும் விளைவு அம்ருதத்திற்கு ஸமமாக இருந்திடும் ஸுகம் ஸாத்வீக ஸுகம் எனப்படும் ..

ரம்யமான நல்ல ஸங்கீதம் பாடுபவருக்கும் கேட்பவருக்கும் ஸுகம் அளிக்கக் கூடியது ..  அம்ருதத்திற்கு ஒப்பானது அந்த ஸுகம் ..  பயிற்சியின் விளைவு இது ..  அந்த  ஸுகத்தை அநுபவித்திட எத்தனை வர்ஷங்கள் பயிற்சி எடுக்க வேண்டும் ??  எவ்வளவு கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும் ??  அந்தப் பயிற்சி ஸுகம் அளிக்கக் கூடியதா ??  ஸுகங்களைத் தவிர்த்து விட்டே பயிற்சி எடுக்க வேண்டும் ..

ஆரோக்யமான ஶரீரம் ஸுகமான வாழ்க்கைக்கு ஆதாரம் ..  உத்ஸாஹமும் வலிமையையும் ஆற்றலும் கொண்ட நோயற்ற ஶரீரம் கிடைப்பதற்கு தொடர்ச்சியான தேஹப்பயிற்சி அவஶ்யமானது ..  எவ்வளவு நீண்ட காலம் ?  எத்தகைய பயிற்சி ??  அப்பயிற்சி ஸுகம் அளிக்கக் கூடியதா ??  இல்லை ..  பல ஸுகங்களைத் த்யாகம் செய்து விட்டே பயிற்சி செய்ய வேண்டும் ..

கால்பந்தில் மெஸ்ஸி போன்ற விளையாட்டு வீரர்களின் கலைநயம் மிகுந்த  தேர்ந்த விளையாட்டைப் பார்ப்பதும் ஸுகம் ..  அவ்வாறு விளையாடுவதும் ஸுகம் ..  அத்தகைய ஸுகம் அநுபவித்தல் என்பது விளைவு ..  பயிற்சியின் பரிணாமம் ..  தினஸரி பயிற்சி ..  வரஷக் கணக்கில் நீளும் பயிற்சி ..  கடுமையான பயிற்சி ..  பல்வேறு ஸுகங்களை மறந்து செய்யப் பட வேண்டிய பயிற்சி ..

ஒரு பரத நாட்ய நிபுணரின் அனுபவமும் இதே ..  வேறு பல உதாஹரணங்களையும் அடுக்கலாம் ..  இவை அனைத்தும் வார்தைகளால் வர்ணிக்க முடியாத ஸுகங்கள் ..  அலாதியான ஸுகங்கள் ..  இவை அனைத்தும் ஆரம்ப நிலையில் ஸுகம் அளிக்கக் கூடியவை அல்ல ..  எதிர்மாறாக , ஸுகங்களை த்யாகம் செய்து , பயிற்சியில் ஈடுபட வேண்டும் ..  பயிற்சி கடுமையானது ..  மனஸிற்குக் கசப்பு அளிக்கக் கூடியது ..  இன்றைய கால மொழியில் சொல்ல வேண்டும் என்றால் Boring experience ..  ஆனால் , இவை அனைத்திலும் விளைவு ஸுகமானது ..  அம்ருதத்திற்கு ஒப்பானது ..

இதையே ஸ்ரீ க்ருஷ்ணன் ஸாத்வீக ஸுகம் என்கிறார் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...