Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 279


கீதையில் சில சொற்றொடர்கள் - 279


विषयेन्द्रिय संयोगात् यत्तदग्रे अमृतोपमं परिणामे विषमिव तत्सुखं राजसम् .. (अध्याय १८ - श्लोक ३८)
விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத்ததக்ரே அம்ருதோபமம் பரிணாமே விஷமிவ தத் ஸுகம் ராஜஸம் ...  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 38)
Vishayendriya Samyogaat Yattadagre Amruthopamam Parinaame Vishamiva thath Sukham Raajasam .. (Chapter 18 - Shlokam 38)

அர்தம் :  ராஜஸ ஸுகம் இந்த்ரியங்கள் மற்றும் விஷயங்களின் இணைப்பினால் ஜனிக்கிறது ..  ஆரம்பத்தில் அம்ருதம் போலவும் விளைவில் விஷம் போலவும் இருந்திடும் ..

பொதுவாக ஸுகம் என்று நாம் கருதும் அனைத்தும் இந்த்ரியங்கள் மற்றும் விஷயங்களின் இணைப்பால் உருவாகுபவை ..  கண் காக்ஷியுடனும் காது ஶப்தத்துடனும் நாஸி கந்தத்துடனும் நாக்கு ருசியுடனும் தோல் ஸ்பர்ஶம் மூலம் வஸ்துக்களுடனும் இணைந்திடும் போது உருவாகும் அநுகூல அநுபவத்தை ஸுகம் என்கிறோம் ..  ப்ரதிகூல அநுபவத்தை து:கம் என்கிறோம் ..  இவ்வகை ஸுகத்தை இந்த்ரிய ஸுகம் அல்லது ஶரீர ஸுகம் என்றும் அறிகிறோம் ..

இவ்வகை ஸுகங்கள் இந்த்ரியங்கள் மூலமாகவே அறியப் படுகின்றன ..  மனஸால் அநுபவிக்கப் படுகின்றன ..  இவை ஆரம்பத்தில் அம்ருதம் போல , மனஸிற்கு ஹிதமாக இருந்திடும் ..  மனஸ் இந்த ஸுகங்களில் லயித்திடும் ..  மீண்டும் மீண்டும் இவற்றை நாடிடும் ..  ஆனால் , இவ்வகை ஸுகங்களை து:க ஶோக ஆமய ப்ரதா என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  அதாவது , இறுதியில் இந்த ஸுகங்களில் இருந்து பரிணாமமாக , கஷ்டம் , மன வருத்தம் மற்றும் நோய் விளைந்திடும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  இந்த்ரியங்கள் மீண்டும் மீண்டும் விஷயங்களுடன் இணைவதால் , காலப்போக்கில் தளர்ந்து விடுகின்றன ..  தத்தம் ஆற்றல் இழந்து விடுகின்றன ..  ஶரீரத்தில் பலஹீனம் மற்றும் பல்வகை  நோய்களைத் தோற்றுவித்து , கஷ்டத்திற்குக் காரணமாகி விடுகின்றன ..

ஆற்றல் இழந்த இந்த்ரியங்கள் தத்தம் விஷயங்களுடன் இணையும் போது , அதே அளவு ஸுகம் கிடைப்பதில்லை ..  மன வருத்தத்திற்குக் காரணம் ஆகிறது ..  உலகத்தில் , நம் இந்த்ரியங்களுக்கான விஷயங்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதில்லை என்பதும் மன வருத்தத்திற்குக் காரணம் ஆகிறது ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...