Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 281


கீதையில் சில சொற்றொடர்கள் - 281


ब्रह्म कर्म स्वभावजम  ...  (अध्याय १८ - श्लोक ४२)
ப்ரஹ்ம கர்ம ஸ்வபாவஜம்  ...  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 42)
Brahma Karma Swabhaavajam  ...  (Chapter 18 - Shloka 42)

அர்தம் :  ப்ராஹ்மணனின் (ப்ரஹ்மத்தின்) ஸ்வபாவமான கர்மங்கள்  ...

ப்ராஹ்மணனின் கர்மங்கள் அல்லது செயல்கள் இந்தத் தன்மைகள் கொண்டவையாக இருந்திடும் ..

(1) . ஶமஹ -  அமைதி ..  பரபரப்பு இன்மை ..  (2) . தமஹ -  கட்டுப்பாடு ..  புலன் அடக்கம் ..  (3) . தபஸ் -  தொடர்ச்சியான முயற்சி ..  எத்தனை இடர்களும் கவர்ச்சியிலும் எதிர்ப்பட்டாலும் இடறி விடாமல் தொடர்ந்த முயற்சியில் ஈடுபடுதல் ..  (4) . ஶௌசம் -  தூய்மை ..  புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை .  (5) . க்ஷாந்தி -  மன்னிக்கும் தன்மை ..  (6) . ஆர்ஜவம் -  நேர்மை , எளிமை ..  (7) . க்ஞானம் .. அறிதல் ..  (8) .  விக்ஞானம் -  அறிந்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் ..  (9) . ஆஸ்திக்யம் -  நம்மை மீறிய ஒன்று இருக்கிறது என்ற ஆழமான ஶ்ரத்தை ..

இவை தன்மைகள் ..  ப்ராஹ்மணனின் ஸஹஜ ஸ்வபாவம் -  அவனுடைய கர்மங்கள் , வாக்கு மற்றும் சிந்தனை - அவனுடைய வாழ்க்கையில் வெளிப்படும் ..

ஶம: அல்லது அமைதி , தம: அல்லது கட்டுப்பாடு , தபஸ் அல்லது தொடர் முயற்சி ஆகிய தன்மைகளின் விளைவால் ஸங்கீதம் , பஜனை , வேதம் ஓதுதல் , யோகம் , ஸாஹித்யம் போன்ற துறைகளில் தொடர்ந்து  வர்ஷக்கணக்கில் , ஏன் !  வாழ்க்கை முழுவதும் ஈடுபட முடிகிறது ..  ஸுஸ்வரமாகப் பாடக் கூடியவர்கள் அனைத்து ஸமுதாயங்களிலும் பிறக்கிறார்கள் ..  ஆழமான அமைதி உள்ளவர்களே ஸங்கீதத்தின் ஆழங்களை அடைகிறார்கள் ..  ஆழத்தை நோக்கிய ப்ரயாணம் செய்வதற்கும் அமைதி அவஶ்யமானது ..

ஶௌசம் --  ஶரீரத் தூய்மை , வாக்குத் தூய்மை , சிந்தனையில் தூய்மை --  ரெண்டு வேளைகள் ஸ்நானம் , ஆசமனீயம் , மடி வஸ்த்ரம் ஆகியவை ஶரீர ஶௌசத்திற்காகவும் , ஸ்பஷ்ட உச்சரிப்பு , நல்ல வார்தைகள் , கருத்துள்ள பேச்சு ஆகியவை வாக் ஶௌசத்திற்காகவும் , தெய்வ உபாஸனை , வேத  பாராயணம் , ஸத்ஸங்கம் ஆகியவை சிந்தனையின் ஶௌசத்திற்காகவும் ப்ராஹ்மணன் அநுஷ்டிக்கிறான் ..

க்ஷாந்தி அல்லது மன்னிக்கும் தன்மை ..  பொறுமை --  பழி வாங்க வேண்டும் , பதிலடி கொடுக்க வேண்டும் , நான் யார் என்று நிரூபிக்க வேண்டும் போன்ற தன்மைகள் உலகாயத வாழ்க்கையில் ஸஹஜமாகக் காணப் படுபவை ..  இவை நம் வாழ்க்கையின் திஶையை மாற்றக் கூடியவை ..  நாம் ஈடுபட விரும்பும் விஷயத்தில் இருந்து நம்மை புறம் தள்ளக் கூடியவை ..  ஆன்மீக முயற்சிகளை பாதிக்கக் கூடியவை ..  பகவான் மீதுள்ள ஶ்ரத்தையும் க்ஷாந்தியை , மன்னிக்கும் தன்மையை வலுப்படுத்துகிறது ..

ஆர்ஜவம் --  நேர்மை .. எளிமை .. உள்ளே உள்ளதும் வெளியே தெரிவதும் ஒன்றே ..  கபடம் இல்லாமை ..  இறை ஶ்ரத்தை இத்தன்மையை வளர்த்து விடும் ..

க்ஞானம் --  அறிய வேண்டும் என்ற ஆர்வம் , அறிவதற்கான முயற்சி ..  நேர்மையான முயற்சி , தொடர்ந்த முயற்சி இவை இருந்தால் க்ஞானம் ஸம்பாதிக்கலாம் ..   மேல் எழுந்த வாரியாக அல்லாமல் ஆழமாக அறிய வேண்டும் , அடிப்படை ஸத்யத்தை அறிய வேண்டும் என்ற தாஹம் மிக அவஶ்யமானது ..

விக்ஞானம் --  அறிந்ததைத் தம் வாழ்க்கையில் செயல் படுத்த வேண்டும் என்பது நேர்மையின் வெளிப்பாடு ..

ஆஸ்திக்யம் --  இறைவன் மீது , நம்மை மீறிய ஒரு ஶக்தி மீது உறுதியான நம்பிக்கை --  ப்ராஹ்மணனின் அஸ்திவாரமே இதுதான் ..  ப்ராஹ்மணன் நக்ஸலைட் ஆக முடியும் ..  கோபத்தின் விளைவால் ..  ஆனால் , த்ராவிடக் கழகத்தில் இருக்க முடியாது ..

ப்ராஹ்மணனின் கர்மங்களில் இத்தன்மைகள் வெளிப்படும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...