Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 282


கீதையில் சில சொற்றொடர்கள் - 282


क्षात्रं कर्म स्वभावजम  ...  (अध्याय १८ - श्लोक ४३)
க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்  ...  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 43)
Kshaatram Karma Swabhaavajam  ...  (Chapter 18 - Shloka 43)

அர்தம் :  க்ஷத்ரியனின் (க்ஷாத்ரத்தின்) ஸ்வபாவமான கர்மங்கள்  ...

க்ஷத்ரியனின் கர்மங்கள் இந்த இயல்புகளை வெளிப்படுத்தும் ..  (1) ..  ஶௌர்யம் -  ஶூரத்தனம் - துணிச்சல் - பொதுவாக யாரும் செய்யத் துணியாத கார்யங்களைச் செய்தல் ..  (2) ..  தேஜஹ --  ரெண்டு அர்தங்கள் சொல்லலாம் .  (அ) - பிறர் மீது தாக்கம் ஏற்படுத்தும் ஆற்றல் .  (ஆ) - வேகம் ..  (3) ..  த்ருதிஹி - பொறுமை , கஷ்டங்களைத் கொள்ளும் தன்மை ..  (4) .. தாக்ஷ்யம் ..  ஜாக்ரத உணர்வு , விழிப்பு உணர்வு ..  (5) .. யுத்தே சாப்யபலாயனம் ..  யுத்தத்தில் இருந்து பின் வாங்காத நிலை ..  (6) - தானம் ..  தானம் ஒரு க்ஷத்ரியனின் ப்ரதானத்தன்மை ..  (7) ..  ஈஶ்வர பாவஹ -  நானே ஈஶ்வரன் , நானே அனைத்தையும் கட்டுப்படுத்துபவன் , நானே Boss / பாஸ் என்ற தோரணை ..

க்ஷத்ரியனின் ஸஹஜ ஸ்வபாவமான இந்தத் தன்மைகள் அவனது கர்மங்களில் வெளிப்படும் ..

ஶௌர்யம் --  ஶூரத்தனம் ..  துணிச்சல் ..  லவலேஶ பயமும் அற்ற நிலை ..  ஆங்க்லத்தில் Dare Devil என்பார்களே , அது ..

தேஜஸ் ..  மற்றவர் மீது தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் ..  ஒரு ரயில் வண்டி மிக வேகமாகச் செல்லும் போது , பக்கத்து தண்டவாளம் மீது  தனியாக நிற்கும் ரயில் பெட்டிக்கு கொஞ்ஜம் வேகம் கிடைக்கிறது ..  இது தேஜஸ் ..  அமைதியான ஒருவரின் அருகில் அமர்ந்திருக்கும் போது , நம் மனஸும் அமைதியால் நிறைகிறது ..  இது தேஜஸ் ..  வீரமான ஒருவரின் ஸாஹஸத்தைக் கேட்கும் போது , நம் மனஸில் சில க்ஷணங்களுக்கு வீர உணர்வு எழுகிறது ..  நாமும் அவரைப் போல் ஆக வேண்டும் என்ற ஸங்கல்பம் பிறக்கிறது ..  இது தேஜஸ் ..  தேஜஸ் என்ற பதம் வேகம் என்றொரு அர்தத்திலும் உபயோகம் ஆகிறது ..  க்ஷத்ரியன் வேகம் நிறைந்தவன் ..  வேகமான நிர்ணயங்கள் ..  வேகமான செயல்கள் ..

த்ருதி ..  பொறுமை ..  கஷ்டங்களை , குறிப்பாக ஶரீரத்தின் வலி வேதனையைத் தாங்கும் மனோ வலிமையே த்ருதி ..

தாக்ஷ்யம் ..  விழிப்புணர்வு ..  கூர்மையான கண்களும் காதுகளும் ..  எங்கெங்கு என்னென்ன நடக்கிறது என்பதை அறிந்திடும் முயற்சி ..  எவர் எவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிந்து அவரைப் பற்றிய சரியான கணிப்பு வைத்திருப்பவர் ..

யுத்தே அபலாயனம் ..  எடுத்த கார்யத்தில் இருந்து ஓடா மன நிலை ..  போராட்டத்திற்குப் புற முதுகு காட்டா தன்மை ..  தோல்வி பயம் இல்லாமை ..

தானம் ..   அஹங்காரம் நிறைந்தவன் தானம் கொடுப்பது ஸஹஜம் ..  நானே இவர்கள் அனைவரையும் போஷிக்கிறேன் என்ற அஹங்காரம் ..  இது க்ஷத்ரியனின் ஸ்வபாவம் ..

ஈஶ்வர பாவம் ..  நான்தான் ஸர்வாதிகாரம் படைத்தவன் ..  என் கையில் எல்லாம் ..  நானே அனைவருக்கும் ஈஶன் (boss)  என்ற மன நிலை ..

இத்தன்மைகள் ஒரு க்ஷத்ரியனின் ஸ்வபாவம் ..  அவனது எண்ணத்திலும் , வாக்கிலும் செயல்களிலும் இத்தன்மைகள் வெளிப்படும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...