Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 292


கீதையில் சில சொற்றொடர்கள் - 292


तमेव शरणं गच्छ .. (अध्याय १८ - श्लोक ६२)
தமேவ ஶரணம் கச்ச --  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 62)
Thameva Sharanam Gachcha  ...  (Chapter 18 - Shlokam 62)

அர்தம் :  அவனை ஶரண் அடைவோம் ..

ஸ்ரீ பரமனை ஶரண் அடைதல் , அவனை ஸார்ந்து இருத்தல் ..  இது பரமனின் உபாஸனையில் மிக உன்னதமான வழி ..  இதற்குத் தடையாக இருப்பது 'நான்' ..  'நான் ஸாதிப்பேன்' ;  'நான் நினைத்ததை முடிப்பேன்' ;  'என்னால் முடியாதது எதுவும் இல்லை' ;  'என் வாழ்க்கை என் கையில்' ;  என்றெல்லாம் முழக்கப் படுகின்றன ..  மநுஷ்யனின் தன்னம்பிக்கையைத் 'தட்டி' எழுப்பிட இம்முழக்கங்கள் அவஶ்யமானவை என்று வலியுறுத்தப் படுகிறது ..  'Ego boosting அல்லது மிகப் பெரிதாக ஊதி வளர்க்கப் பட்ட நான்' உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றிட இன்றி அமையாதது என்ற கருத்து நம் காதுகளில் எல்லா திஶைகளிலிருந்தும் பாய்ச்சப் படுகிறது ..

இந்நிலையில் 'ஶரணடைந்து விடு' என்ற ஸ்ரீ க்ருஷ்ணனின் யோஜனை காலத்திற்கு ஒவ்வாதது , நடைமுறைப் படுத்த இயலாதது என்று பலரும் நினைக்கின்றனர் ..  ஶரணடைதல் நம் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தடை என்று கருதுவோர் பலர் ..

குனிந்து காலைத் தொடுதல் , விழுந்து நமஸ்காரம் செய்தல் , நிர்ணயங்களை அவனிடம் விட்டு விடுதல் , விருப்பு - வெறுப்பு இல்லாமல் கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுதல் , அவனை ஸார்ந்து வாழ்தல் , தனக்கு என்று எவ்வித கவலையோ திட்டமோ எதிர்பார்ப்போ இல்லாமல் வாழ்தல் இவை ஶரணடைதல் என்பதன் பல நிலைகள் ஆகும் ..

ஆன்மீக வளர்ச்சிக்கு ஸமர்பணம் அதி அவஶ்யமானது ..  உலக வாழ்க்கைக்கும் ஸமர்பணம் உபயோகமானதே ..நாம் விரும்பும் அனைத்தும் , நாம் எதிர்ப்பார்க்கும் அனைத்தும் கிடைக்காது என்பதே லோக ஸத்யம் ..  இத்தகைய ஏமாற்றங்களின் புயல்களுக்கு மத்தியில் நம் மனஸை அமைதியாகவும் ஆரோக்யமாகவும் ஸமநிலையோடு வைக்க உதவிடும் வழி ஸமர்பணம் ..

ஶரணடைந்து விடு ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...