Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 293


கீதையில் சில சொற்றொடர்கள் - 293


यथेच्छसी तथा कुरु  ...  (अध्याय १८ - श्लोक ६३)
யதேச்சஸி ததா குரு  ...  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 63)
Yathechchasi Tathaa Kuru  ...  (Chapter 18 - Shloka 63)

அர்தம் :  உன் விருப்பப் படி எது ஸரி என்று நினைக்கிறாயோ அதைச் செய்திடு  ...

ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கருத்து இது ..  ஹிந்து தர்மத்தில் க்றிஸ்தவ 'commandments' கிடையாது ..  இஸ்லாமின் ஃபத்வா கிடையாது ..  தெய்வத்தின் கட்டளைகள் கிடையாது ..  இங்கு பூர்ணமான விசார ஸ்வாதந்தர்யம் (கருத்து ஸ்வதந்த்ரம்) உண்டு ..  ஆசார ஸ்வாதந்தர்யம் (செயல்களின் ஸ்வதந்த்ரம்) உண்டு ..  பகவானை ஏற்க மறுக்கவும் ஸ்வாதந்தர்யம் உண்டு ..  நம் சிந்தனைக்கும் செயல்களுக்கும் ஸம்ஸார நியதிகளின் அடிப்படையில் ஃபலன்கள் உண்டு ..  விளைவுகள் உண்டு ..  நிஶ்சயம் உண்டு ..

ஸ்வதந்த்ரம் வேண்டும் என்றால் விளைவுகளின் பொறுப்பையும் ஏற்க வேண்டும் ..  இங்கு காலத்திற்கு ஏற்ற மாற்றமும் உண்டு ..  முன்னேற்றமும் உண்டு ..  ஸ்வாதந்தர்யம் இல்லாத மதங்களில் இயற்கையைப் பற்றியோ ஸமுதாயத்தைப் பற்றியோ , ஏன் ஸ்வந்த வாழ்க்கையைப் பற்றியும் பொறுப்பு கிடையாது ..  அங்கு மாற்றத்திற்கும் இடம் இல்லை ..  முன்னேற்றத்திற்கும் இடம் இல்லை ..  புஸ்தகத்தில் எழுதப் பட்டதே இறுதி ஸத்யம் ..  இறை தூதனால் சொல்லப் பட்டதே இறுதி ஸத்யம் ..  முன்னேற்றம் வேண்டும் என்றால் புஸ்தகத்தை விட வேண்டும் ..  மதத்தை விட வேண்டும் .  மதம்தான் வேண்டும் , புஸ்தகம்தான் வேண்டும் என்றால் முன்னேற்றத்தை விட வேண்டும் ..  காலத்துக்கேற்ற மாற்றங்களை இழக்க வேண்டும் ..

இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதை சொன்னான் ..  விரிவாகச் சொன்னான் ..  ஆனால் , இறுதியில் "எனக்கு ப்ரியமானவன் என்பதால் உனக்கு கீதையைக் கூறினேன் ..  இனி நீ உன் சிந்தனைக்கு ஸரி என்று படுவதைச் செய் ..  உன் விருப்பப் படி செயல்படு" என்கிறான் ..  இதுவே ஹிந்து தர்மத்தின் உயர்வு ..  அதனால் தான் ஹிந்து தர்மம் காலத்தால் அழியாது நிற்கிறது ..  இதோ அழிந்து விட்டது என்ற மிக விபரீதமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது .. தழைத்து ஓங்குகிறது ...  ஹிந்தியில் "நித்ய நூதன் - சிர புராதன்" (नित्य नूतन - चिर पुरातन) என்பார்கள் ..  அதாவது , தொன்மையானது எனினும் என்றென்றும் புதுமையானது ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...