Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 301


கீதையில் சில சொற்றொடர்கள் - 301


तच्च संस्मृत्य संस्मृत्य रूपम अत्यद्भुतम हरेः विस्मयो में महान राजन हृष्यामि च पुनः पुनः ।  (अध्याय १८ - श्लोक ७७)
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபம் அதி அத்புதம் ஹரேஹ விஸ்மயோ மே மஹான் ராஜன் ஹ்ருஷ்யாமி ச புனஹ் புனஹ் ..  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 77)
Thath cha Samsmruthya Samsmruthya Roopam Ati Adbhutam Hareh ..  Vismayo Me Mahaan Rajan Hrushyaami Cha Punah Punah ... (Chapter 18 - Shloka 77)

அர்தம் :  ஸ்ரீ ஹரியுடைய அதி அத்புத ரூபத்தை நினைத்து நினைத்து நான் ஆஶ்சர்யத்தில் மூழ்குகிறேன் ..  மீண்டும் மீண்டும் ஆனந்தம் அடைகிறேன் ..

இவையும் தேரோட்டி ஸஞ்ஜயனின் வார்தைகள் ..  ஸஞ்ஜயனுக்கு ரெண்டு மாபெரும் பாக்யங்கள் , அவன் எதிர்ப்பார்க்காத பாக்யங்கள் கிடைத்தன ..  ஸஞ்ஜயன் தன்னை மிக ஸாதாரண ஜீவனாகக் கருதி இருந்தான் ..  ஸபையில் நடந்த நிகழ்வுகளில் தனது கருத்தைக் கூறத் துணிந்ததில்லை ..  ஸ்ரீ வேத வ்யாஸர் அவனுக்கு திவ்யப் பார்வை அருளிய போது , பணிவுடன் , ஸேவை செய்திட ஒரு வாய்ப்பாகக் கருதியே அதை ஏற்றான் ..  ஆனால் , யுத்த பர்வத்தில் பகவத் க்ருபை அவன் மீது பொழிந்தது ..  அவன் எதிர்பார்த்திடாமல் பொழிந்தது ..  ஒன்று ..  அம்ருத துல்ய கீதை என்ற தெய்வீக உரையாடலைக் கேட்டான் ..  நேரடியாக ஸ்ரீ க்ருஷ்ணனின் திவ்ய உதடுகளைத் ஸ்பர்ஶித்த படி வெளிப்பட்ட வசனங்களைக் கேட்டான் ..  மற்றொன்று ..  ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு அருளிய விஶ்வ ரூப தர்ஶனத்தைப் பார்த்தான் ..  அதனால் அவன் ஆனந்தக் களிப்பில் இருக்கிறான் ..  தன்னை மறந்து இருக்கிறான் ..  அந்த திவ்ய தர்ஶனத்தை மீண்டும் மீண்டும் நினைத்து பரவஶமாகிறான் ..  ஆஶ்சர்யத்தில் மூழ்குகிறான் ..  ஆனந்தக் கூத்தாடுகிறான் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...