Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 59


கீதையில் சில சொற்றொடர்கள் - 59


युक्ताहार , युक्त विहार , युक्त कर्म चेष्टा , युक्त स्वप्न , युक्त बोध ... (अध्याय ६ - श्लोक १७)
யுக்த ஆஹார , யுக்த விஹார் , யுக்த கர்ம சேஷ்டா , யுக்த ஸ்வப்ன , யுக்த போத  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 17)
Yukta Aahaar , Yukta Vihaar , Yukta Karma Cheshtaa , Yukta Swapna , Yukta Bodha  ...  (Chapter 6 - Sholka 17) 

அர்தம் :  உகந்த உணவு , உகந்த ப்ரயாணம் (சுற்றல்) , உகந்த முயற்சிகள் , உகந்த உறக்கம் மற்றும் விழிப்பு ...

"உகந்த போஜனம் , உகந்த ப்ரயாணம் , உகந்த உழைப்பு , உகந்த உறக்கம் மற்றும் விழிப்பு .. யோகம் ஸித்தம் ஆகிட இவை அவஶ்யமானவை" என்பதே ஸ்ரீ க்ருஷ்ணனின் அறிவிப்பு .

உகந்தது எது ?  ஒருவருக்கு உகந்தது என்பது மற்றவருக்கு உகாதது .  அதனால் தான் ஸ்ரீ க்ருஷ்ணன் உகந்தவை எவை என்று பட்டியல் இடவில்லை .  உகந்த என்று கூறுவதுடன் நிறுத்திக் கொண்டான் .  உனக்குப்  பொருந்தக்க கூடியது , உனக்கு ஸுலபமானது , உனக்கு நலன் பயக்கக் கூடியது உனக்கு உகந்தது .  ஹிந்து தர்மத்தின் அழகு இதுதான் .  இங்கு கட்டளை இல்லை .  ஃபத்வா இல்லை .  யோஜனைகள் மாத்ரமே உண்டு .  இவ்வகையில் நமக்கு சிந்தனை செய்திட , நிர்ணயம் செய்திட , தேர்ந்தெடுத்திட வாய்ப்பு உண்டு .  கட்டளைகள் இடும் மதங்களில் சிந்தனைக்கும் நிர்ணயத்திற்கும் தேர்விற்கும் வாய்ப்பு கிடையாது .  அவ்வாறு செய்தால் மத விரோதி என்று அறிவிக்கப்பட்டு கொடுமைக்கு , ஏன் கொலைக்கும் ஆளாவான் .

உகந்த போஜனம் ...  உகந்த வகை -  ஶைவம் , அஶைவம் , ஸமைக்கப் பட்டது , பச்சை உணவு , மஸாலா நிறைந்தது , மிதமான ருசி கொண்டது என்று பல வகை ... உகந்த அளவு ..  உகந்த நேரம் - ஒரு வேளை , ரெண்டு வேளை , பல வேளைகள் , ..  எனவே , உகந்த என்பது ஒவ்வொரு மநுஷ்யனுக்கும் மாறுபடும் .  அவரவரின் வயஸு , உடல் நிலை , தொழில் அல்லது வேலை , குடும்பப் பின்னணி , ஶீதோஷ்ண சூழ்நிலை , ஸுலபமாகக் கிடைத்தல் , ஸமூஹ ஸம்ப்ரதாய வழக்கங்கள் ...  போன்ற பல விஷயங்கள் ஒருவனின் போஜனத்தை நிர்ணயிக்கின்றன .  வேதத்திலும் ஶாஸ்த்ரங்களிலும் போஜனத்தைப் பற்றிய பொதுவான சில குறிப்புக்கள் உள்ளன .  போஜனத்தை வீணடிக்காதே .  அன்னத்தைத் தூற்றாதே .  பரிஹாஸம் செய்யாதே .  அன்னம் ப்ரஹ்மம் .  போஜனத்தைப் பகிர்ந்து புஜிக்க வேண்டும் .  பகவானுக்காக என்ற ஶ்ரத்தையுடன் போஜனம் ஸமைக்கப் பட வேண்டும் .  அன்புடனும் பங்க்தி வஞ்ஜனை இல்லாமலும் பரிமாறப்பட்ட வேண்டும் .  போஜனத்தை ஸ்வீகரிப்பவர் இறை ப்ரஸாதமாகக் கருதி ஏற்க வேண்டும் .  அமர்ந்து அமைதியாகவும் த்ருப்தியாகவும்  உட்கொள்ள வேண்டும் .

பசி என்னும் ஶரீர ரோகத்திற்கு போஜனம் மருந்தாகக் கருதப் படுகிறது .  போஜனம் ஆறு ருசிகளும் கூடியதாக இருக்க வேண்டும் .  அந்தந்த ப்ரதேஶங்களில் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து , அந்தந்த ஶீதோஷ்ண சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப் பட வேண்டும் .  எவை , எவ்வாறு என்ற விவரங்களை அவரவர் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் .

நாம் ஸ்வய நினைவுடன் தான் உண்கிறோமா ?  உணவை ருசித்து ஆனந்தமாக உண்கிறோமா ?  ஸ்வய நினைவுடனும் ஆனந்தமாகவும் உண்பது நமக்கு உகந்த உணவை அறிவதில் உதவிடும் .

நம் பாரம்பர்யம் உணவை வ்யாபார விஷயம் ஆக்குவதைத் தவிர்க்கச் சொல்கிறது .  ஆனால் , இன்று போஜனமே மிக அதிக லாபம் தரும் வ்யாபாரம் ஆக இருக்கிறது .  நம் பாரம்பரியத்தில் வ்யாபாரம் கூட தர்ம விதிகளுக்கு உட்பட்டது .  ஆனால் , இன்று உணவு ஸம்பந்தமான வ்யாபாரத்தில் மிக அதிக அதர்மம் தழைக்கிறது .  GM விதைகள் , விதைகளின் மீது காப்புரிமை , பூச்சி மருந்துகள் , உரம் மற்றும் ஊட்ட ஸத்து என்ற பெயரில் விஷ மருந்துகள் , கலப்படம் , மாஸு , வ்யாபாரத்தில் பதுக்கல் , கடத்தல் போன்ற மோசடி , குறைந்த எடை , வ்யாபார மய போஜன மையங்கள் (ஹோடல்கள்) , தூய்மை அற்ற வழிமுறைகள் , அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்படும் உணவுகளில் நிறங்கள் , ருசி ஊக்கிகள் , ஆக்ஸின்ட்ஸ் , ப்ரிஸர்வேடிவ் , என்ற பெயர்களில் மிகையான ரஸாயன சேர்க்கைகள் , அதிக அளவில் வீணாதல் , இறுதியாக நம் பாக்கெட்டில் இருந்து மருத்துவ மையங்களுக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் செல்வத்தின் கடத்தல் .

விஹாரம் என்பது ஸுற்றுதல் .  ப்ரயாணம் என்றும் அர்தம் எடுக்கலாம் .  மிகையான நடை நம் ஶரீரத்தின் மீது பெரும் பாதிப்பு ஏற்படுத்திடாது .  ஆனால் வண்டியில் மிகையான , வேகமான ப்ரயாணம் ஏற்படுத்தும் பாதிப்பும் மிகையானதே .

உழைப்பு .  உகந்த அளவில் உழைப்பு , உகந்த வகையான உழைப்பு .  திட்டம் இடுதல் , செயல்பாட்டையும் விளைவையும் ஆய்வு செய்தல் மற்றும் அநுபவங்களில் இருந்து கற்றல் ஆகியவை மூலம் உகந்த உழைப்பை அறியலாம் .

உகந்த உறக்கம் ..  உகந்த விழிப்பு ..  எவ்வளவு நேர உறக்கம் , எந்த ஸமயத்தில் உறக்கம் , எத்தகைய உறக்கம் , இவை கூட்டாக உகந்த உறக்கம் எனலாம் .  உழைப்பும் உறக்கமும் நேர் விஹிதத்தில் மாறக் கூடியவை .  ஆனால் , உழைப்பை விட கவலை அற்ற , அமைதியான மனஸே உறக்கத்திற்கு ப்ரதான அவஶ்யகம் .

ஒரு கேள்வி எழுகிறது .  இவை ஆன்மீக முயற்சியில் ஸாதனமாவது எவ்வாறு ?  இவை எங்ஙனம் நம்மை பரமனுக்கு அருகே அழைத்துச் செல்லும் ?  இவை ஸ்வய நினைவை , அதற்கு மேல் ஸ்வய ப்ரக்ஞாவை வளர்த்து விடுகின்றன (ஸ்வய உணர்வு) .  நம் விருப்பு வெறுப்புக்களின் மேல் வெற்றி காண இவை உதவுகின்றன .  'மனஸிற்குப் பிடித்தது' என்பதை விட 'உகந்தது' என்பதற்கு அதிக மஹத்வம் கொடுக்கும் வகையில் நம்மை மாற்றுகின்றன .  நம் இந்த்ரியங்களை வஶப் படுத்தவும் உள்-குரலை கேட்கக் கூடிய கூரான "காதுகளை" உருவாக்கவும் பயன் படுகின்றன .இறுதியாக , அறியாததை நோக்கிய எந்த ப்ரயாணமும் அறிந்ததில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...