Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 60


கீதையில் சில சொற்றொடர்கள் - 60


यथा दीपो निवातस्थो  ...  (अध्याय ६ - श्लोक १९)
யதா தீபோ நிவாதஸ்தோ  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 19)
Yathaa Deepo Nivaatastho  ...  (Chapter 6 - Shloka 19)

அர்தம்  :  காற்றில்லாத இடத்தில் தீப ஜ்யோதி எவ்வாறு இருக்கிறதோ ...

காற்றில் உள்ள ப்ராண வாயு தீபம் எரிவதற்கு அவஶ்யமானதே .  ஆனால் காற்று வீசத் தொடங்கினால் , தீபத்தின் ஜ்யோதி தடுமாற ஆரம்பிக்கிறது .  காற்றின் வீச்சு வேகமானால் ஜ்யோதி அணைந்தும் விடுகிறது .  காற்று வீசாத அறையில் தீப ஜ்யோதி அமைதியாக , ஸ்திரமாக , இருக்கிறது .  ப்ரகாஶம் மாத்ரம் இருக்கிறது .  படபடப்பு இல்லாததால் , ஜ்யோதி இருந்தும் இல்லாதது போல் ஆகிறது .

இது ஒரு உவமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது .  கீதையில் இத்தகைய அழகான பல உவமைகள் உள்ளன .  (ஸந்த் ஞாநேஶ்வர் மராடியில் ஞாநேஶ்வரீ என்ற பெயரில் எழுதிய கீதையில் அதிக எண்ணிக்கையில் இத்தகைய அழகிய உவமைகள் உள்ளன .)  இந்த உவமை மனஸிற்காக உபயோகப் பட்டுள்ளது .  நம் மனஸ் ஸ்திரமாகவும் ஶாந்தமாகவும் இருக்க வேண்டும் (அந்த ஜ்யோதியைப் போல ..)  சஞ்சலத் தன்மையே மனஸின் ஸாமாந்ய ஸ்வபாவம் .  ஒரு விஷயத்தில் இருப்பதில்லை .  குரங்கு போல தாவிக் கொண்டே இருக்கிறது .  ஸம்ஸ்க்ருதத்தில் மனோ வேகம் என்றொரு பதம் மனஸின் இத்தன்மையை வெளிப்படுத்துகிறது .  ஒளியின் வேகத்தை விட அதிகமானது மனோவேகம் .  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ப்ரயாணிக்க , ஒளிக்கு சில க்ஷணங்கள் ஆகும் .  ஆனால் , மனஸ் அதே க்ஷணத்தில் ஒரு விஷயத்தில் இருந்து மற்றொரு விஷயத்திற்கு , தான் இருக்கும் இடத்தில் இருந்து உலகத்தின் மறு கோடிக்கு , மற்றொரு க்ரஹத்திற்கு , ஏன் !  அண்ட சராசரத்தையும் தாண்டிச் சென்று விடும் .  உலகில் மற்ற அனைத்து கார்யங்களும் ஸுலபமானவை .  மனஸைக் கட்டுப்படுத்தல் , மனஸை ஸ்திரப் படுத்தலே மிகக் கடினமான கார்யம் .  மநுஷ்யனுக்குக் கடும் ஸவால் விதிக்கும் கார்யம் .

ஆன்மீக ஸாதனையின் விளைவு அமைதியான , ஸ்திர மனஸே .  தீப ஜ்யோதிக்கு காற்றுத் தேவைப் படுவதைப் போல , நமக்கு ஸம்ஸார விஷயங்களுடனான ஸம்பந்தம் தவிர்க்க முடியாதது .  இந்த ஸம்பந்தத்தைத் துண்டித்து விட்டு இஹ லோகத்தில் வாழ முடியாது .  மனோ நாஶம் ஆன்மீக ஸாதனைகளின் லக்ஷ்யமாகக் கருதப் படுகிறது .  மனோ நாஶம் என்பது மனஸைக் கொல்வதில்லை .  உலக விஷயங்களைக் கண்டு கலங்காத கல் மனஸ் கொண்டவன் இல்லை ஒரு யோகி .  அவனும் கசியும் உள்ளம் கொண்டவன் .  காருண்யம் கொண்டவன் .  ஒரு காஃபியின் நறுமணத்தை நுகரக் கூடியதுதான் அவனது நாஸி .  ஒரு பழத்தின் ருசியில் திளைத்து ஆனந்தம் அடையக் கூடியதுதான் அவனது நாக்கும் .  இயற்கையின் ஒரு அத்புதத்தைக் கண்டு ஆஹா ! என்று ப்ரமிக்கக் கூடியதுதான் அவனது மனஸும் .  (புயலில் சிக்கி அலைக்கழிக்கப் படும் நம்மை விட , ஒரு யோகியின் இந்த்ரியங்கள் அதிகக் கூர்மையானவை என்பது தான் உண்மை .)  ஆனால் , இந்த்ரிய - விஷய ஸம்பந்தத்தின் அநுபவங்கள் அவனுள்ளே தாறுமாறாக ஓடி , தடுமாற்றம் ஏற்படுத்த அவன் அநுமதிப்பதில்லை .  ஒரு சில அநுபவங்கள் மீண்டும் மீண்டும் கிடைத்திட இச்சைக் கொள்வதும் மற்ற சில அநுபவங்களைத் தவிர்த்திட ப்ரார்தனை செய்வதும் அவனிடம் இல்லை .  கிடைத்த படி அநுபவங்களை ஏற்றுக் கொள்கிறான் .  அந்நிலையில் இருந்தும் இல்லாமல் போகிறது , அந்த ஜ்யோதியைப் போல .

இச்சை , த்வேஷம் (இவை ரெண்டும் வெவ்வேறல்ல .  ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் .  ஒன்றில்லாமல் மற்றது இல்லை .)  இவற்றைத் தவிர பயமும் மனஸின் ஸ்திரத் தன்மையை , ஶாந்தியை பாதிக்க வல்லது .  எனவேதான் , அபயம் (அ) பயம் அற்ற தன்மை தெய்வத் தன்மையாகப் போற்றப் படுகிறது (அத்யாயம் 16 ) .  கவலை பயத்தின் மறு அவதாரம் .  ஒரு ஸம்ஸ்க்ருத ஸுபாஷிதம் இவ்வாறு சொல்கிறது .  "சிதை சிந்தை இவ்விரண்டில் சிறு வித்யாசமே .  ஒன்று பிணத்தை எரிக்கிறது .  மற்றது மனஸை" .  சிந்தை அல்லது கவலையும் மனஸின் அமைதியை பெரும் அளவு பாதித்திடும் .

விருப்பு வெறுப்பு இல்லாத , பயம் இல்லாத , கவலை இல்லாத மனஸ் கொண்ட ஒருவன் , இவ்வுலகத்தில் பல்வேறு கர்மங்களில் ஈடுபட்டு , சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்திடுவான் , உள்ளே ஸ்திரத்தன்மையையும் ஶாந்தியையும் இழந்திடாமல் , ஆடாமல் அசையாமல் இருந்தும் ஒளி வீசிடும் அந்த ஜ்யோதியைப் போல .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...