Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 71


கீதையில் சில சொற்றொடர்கள் - 71


बलं बलवताम् चाहम् कामराग विवर्जितम् ।  (अध्याय ७ - श्लोक ११)
பலம் பலவதாம் சாஹம் காம ராக விவர்ஜிதம் ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 11)
Balam Balavataam Chaaham Kaama Raaga Vivarjitham ...  (Chapter 7 - Shloka 11)

காமம் மற்றும் விருப்பங்கள் இல்லாத பலமும் நானே ...

பலம் நானே ... ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுகிறான் .  பலம் , ஆனால் காமம் மற்றும் ஆஶைகள் இல்லாத பலம் ...  ராக்ஷஸர்களின் பலம் இல்லை ... ராவணனின் பலம் இல்லை .  மைக் டைஸனின் (Mike Tyson) பலம் இல்லை .  ஹப்தாஹ் வஸூல் (கட்டாய வஸூல்) செய்திடும் ரௌடியின் பலம் இல்லை .  இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கையில் உள்ள துப்பாக்கிகளிலும் குண்டுகளிலும் உள்ள பலம் இல்லை .  மெடிகல் , இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் கூட்டம் சேர்த்து புதிய மாணவன் மீது ரேக்கிங் என்ற பெயரில் வன்கொடுமை செய்திடும் மாணவர்களின் பலம் அல்ல .  அஸஹாயப் பெண்ணை இருட்டிலும் தனிமை இடங்களிலும் கற்பழித்திட முயலும் ஆண்களின் பலம் அல்ல .  ஏழைகளை பயமுறுத்தி கப்பம் கட்ட வைத்த கம்ஸனின் பலம் இல்லை .  தன் ஸ்வய ஸுக போகத்திற்காக , ஸ்வயநலத்திற்காக ஜனங்கள் மீது கொடுங்கோல் ஆக்ஷி நடத்திய ஸர்வாதிகளின் பலம் இல்லை .

ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டால் , அரைகுறையாக முதல் பகுதியை மாத்ரம் புரிந்து கொண்டால் , இவ்வாறெல்லாம் தோன்ற வாய்ப்பு உண்டு .  இவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டோரே "ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன ?" என்று கேட்பவர்கள் .  அவர்களே தர்ம விரோத கொடுங்கோல முகலாயர்களை ராஜாவாக ஏற்றுக் கொண்டவர்கள் .  அவர்களே 1857ல் ஒரு ஹிந்து ராஜாவின் தலைமையை ஏற்காமல் முகலாய வாரீஸு ஜஃபர் ஷாவின் தலைமையை ஏற்று ஆங்க்லேய ஆக்ஷியின் எதிராகப் போராடினர் .  அவர்களே சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் , கடத்தல் வீரப்பன் போன்றோரும் காளியை வழிபட்டனர் , ஜனங்களுக்கு நன்மை செய்தனர் என்று கூறி போற்றுபவர்கள் .  அவர்களே ஒழுக்கம் வந்தது , கட்டுப்பாடு வந்தது என்று கூறி இந்திராவின் எமர்ஜென்ஸி கொடுங்கோல ஆக்ஷியையும்  ஏற்றவர்கள் .

வேறொரு இடத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் , "நரர்களில் ராஜா நானே" என்கிறான் .  ராஜா விதிக்கும் நியமங்களுக்குக் கட்டுப்படுவது நம் கடமை .  அதில் ஸந்தேஹம் இல்லை .  ஆனால் , ஸ்வயநலக் கொடுங்கோலன் எதிர்க்கப் பட வேண்டியவன் .  அழிக்கப் பட வேண்டியவன் .  ராவணன் எரிக்கப் பட வேண்டியவன் .  "அவன் வேதம் பயின்ற ப்ராஹ்மணன் .  தெய்வீக ஸங்கீதத்தில் நிபுணன்" என்பதெல்லாம் பொருட்டல்ல .  காமத்துடன் கூடிய பலம் கொண்டவன் . 

இந்த ஶப்தாவலியின் மூலம் பலத்திற்கு ஒரு ஹேது அளிக்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .  பலம் நாடுபவர்களுக்கு ஒரு நோக்கம் அளிக்கிறான் .  பலம் ஶேகரியுங்கள் .  பலத்தை வழிபடுங்கள் .  எதற்காக ?  தர்ம ரக்ஷணத்திற்காக ..  பலஹீனர்களைக் காப்பதற்காக ... அதர்மத்தின் எதிரில் போராடுவதற்காக ...  கொடுமையாளர்களை அழிப்பதற்காக .. பலம் நாடுங்கள் .  ஒழுக்கம் இல்லாத பலம் , ஸ்வய நலம் கூடிய பலம் , காமத்துடன் கூடிய பலம் ராக்ஷஸ பலம் .  ஒழுக்கம் கூடிய பலம் , தர்மம் காக்கும் பலம் , பலஹீனர்களைக் காத்திடும் பலம் (ராஜாவின் ப்ரதானக் கடமை கோ-ப்ராஹ்மண பரிபாலனம் .. பலஹீனர்களைக் காத்தல் ) அதர்மம் அழிக்கும் பலம் தெய்வத்தின் ஸ்வரூபமே .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...