Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 100


கீதையில் சில சொற்றொடர்கள் - 100


अनन्याश्चिन्तयन्तो माम्  ।  (अध्याय ९ - श्लोक २२)
அநந்யாஶ்சிந்தயந்தோ மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22)
AnanyaashChintayanto Maam  ...  (Chapter 9 - Shloka 22)

அர்தம் :  என்னுடைய சிந்தனையில் மூழ்கி இரு ... (வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் ... அநந்ய) .

நமக்கு ரெண்டு சாய்ஸ் , மாற்றுக்கள் உண்டு .  படைப்பு - படைத்தவன் , உலகம் - அவன் , ஜடம் - சைதன்யம் .  நாம் உலத்திற்காக வாழலாம் அல்லது அவனுக்காக .  ஜடத்திற்காக வாழலாம் அல்லது சைதன்யத்திற்காக ...  (படைப்பு என்பது நம்மிடம் உள்ள ஶரீரத்தில் இருந்து உலகம் வரை ...) .

மாற்று 1 -  உலகத்திற்காக வாழ்தல் ...  உலகத்தைப் பற்றிய சிந்தனை ... ஜடத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும் .  ஶரீரம் , அதன் தேவைகள் , பணம் , குடும்பம் , ஸுகங்கள் , பெயரும் புகழும் , செல்வாக்கு , கெளரவம் , போன்ற விஷயங்களைப் பற்றிய சிந்தனை மனஸில் நிலைத்து நிற்கும் .  கூர்மையாகக் குவிந்து , ஒரு விஷயத்தில் நிலைக்கும் மனஸ் , நம் (லௌகீகக்)  காரியங்களின் செயல் திறனை ஊக்குவிக்க வாய்ப்பு உண்டு .  ஆனால் , உலக விஷயங்களின் சிந்தனை ஓங்கி இருக்கும் இதே மனஸ் தெய்வம் / பரமன் ஸம்பந்தமான கார்யங்களில் பெரும் தடங்கலாக அமைந்து விடும் .  இத்தன்மையை ஆலயங்களில் பளிச்சென்று காணலாம் .  பெரும்பாலோர் , ஆலயங்களில் நுழைந்து ஸந்நிதிக்குச் சென்று அவனுக்கு ஒரு 'கும்பிடு' போட்டு விட்டு , ஏதோ அக்னி குண்டம் மேல் நடப்பது போல வேகமாக ப்ரஹாரத்தை ஸுற்றி வந்து , ஓரிரு நிமிஷங்கள் மண்டபத்தில் அமர்ந்து விட்டு , கோயிலை விட்டு வெளியேறி விடுவர் .  ஆன்மீக யாத்ரை என்ற பெயரில் செல்லும்போதும் ஒரு கோவிலில் இருந்து அடுத்த கோவிலுக்குத் தாவிக் குதித்து , குறுகிய விடுமுறைக் காலத்தில் அதிகக் கோவில்களை 'முடித்து விட்டுத் திரும்புவோர் பலர் .  த்யானம் செய்யவும் ரெண்டு மூன்று நிமிஷங்கள் அமர முடியாதவர்கள் இவர்கள் .  த்யானம் வேண்டாம் .  ஆடாமல் அஸையாமல் ஓரிரு நிமிஷங்கள் ஸும்மா உட்காருவதும் இயலாது .  பஜனையில் , ஆன்மீக ப்ரஸங்கத்தில் ஒரு மணி நேரம் உட்காரச் சொல்லுங்கள் .  இவர்களது பரிதாப நிலையைப் புரிந்து கொள்ளலாம் .  ஸ்வய நல நோக்கத்தில் இவர்கள் நடத்திடும் ஹோமம் போன்ற ஸந்தர்பங்களில் , மனஸ் ஒன்றி , மந்த்ரங்களைத் திரும்பிச் சொல்ல முடிகிறதா ?  மொபைல் பேசுதல் , 'அதிதி' என்ற பெயரில் வேடிக்கை பார்க்க வருவோரை வரவேற்று குஶலம் விசாரித்தல் , ஜோக் என்ற பெயரில் அசடு வழிதல் , நடத்தப்படும் வைபவம் பற்றி கமெண்ட் அடித்தல் , போன்று பல வழிகளில் திஶை மாறித் தடுமாறுவர் .  "ஶீக்ரம் முடித்து விடுங்கள்" என்று நடுநடுவே புரோஹிதருக்குக் குறிப்பு வேறு .  ஆனால் , இதே மநுஷ்யர்களால் டீவீ முன் மணிக்கணக்கில் உட்கார்ந்து அபத்தமான தொடர்களைப் பார்க்க முடிகிறது .  மால் என்ற பெயரில் வந்திருக்கும் அங்காடிகளில் அலங்காரமாக வைக்கப் பட்டிருக்கும் அல்ப வஸ்துக்களை 'ஜொள்ளு' விட்ட படி பார்த்துக் கொண்டே பல மணி நேரம் செலவிட முடிகிறது .  உலகத்தைப் பற்றிய சிந்தனை மனஸில் பதட்ட நிலை ஏற்படுத்துகிறது .  நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது .

மாற்று 2 -  அவனுக்காக வாழ்தல் ...  அவனைப் பற்றிய சிந்தனை , அவனது மஹிமைகளைப் பற்றிய சிந்தனை , அவனது தயை , அவனது விபூதி , அவனது படைப்பு , படைப்பினைப் பற்றி அவனது அன்பு , அவன் வெளிப்படும் விதம் , உதவிடும் அவன் வழிமுறை , போன்ற சிந்தனைகள் மனஸில் மேலோங்கி நிலைக்கின்றன .  விளைவாக , மனஸில் அமைதி ஊற்றெடுக்கிறது .  அன்பு ஊற்றெடுக்கிறது .  தெய்வீக , ஆன்மீக முயற்சிகள் ஸுலபமாகின்றன .  த்யானம் , பஜனையில் லயித்தல் ,  ப்ரஸங்கத்தில் கவனம் செலுத்துதல் , ஹோமம் செய்தல் , கோவிலில் வழிபடுதல் , மலைக்கோவில் தர்ஶனம் , கிரி ப்ரதக்ஷிணம் , தீர்த ஸ்நானம் , போன்ற நிகழ்வுகளில் அமைதியாக கலந்து கொள்ள முடிகிறது .  விளைவாக மனஸில் அமைதி மேலும் உறுதி படுகிறது .  உலகாயத கர்மங்கள் மீது எத்தகைய தாக்கம் ஏற்படுகிறது ?  அவஶ்யமான கார்யங்கள் , வ்யாபாரம் , வேலை , ஒரு தொழில் ஶாலை நடத்தல் , CA , மருத்துவம் , வகீல் , ஆராய்ச்சியாளன் , ஆசிரியர் போன்றவை ஆனந்தமயம் ஆகின்றன .  சிறப்பாகவும் செய்ய முடிகிறது .  அவனைப் பற்றிய சிந்தனை ஓங்கினால் , நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்காகவே செய்யப்படும் .  அக்கர்மங்களில் ஃபலனாகக் கிடைப்பவை அவனுக்கே அர்பணம் ஆகின்றன .  எது கிடைத்தாலும் அதை அவனது ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது .வேகம் அல்லது ஆவேஶம் இல்லை .  மனஸில் தளர்ச்சியும் அலுப்பும் இல்லை .  ஆனந்தம் , நிலைத்த ஆனந்தமே .  தெய்வீகக்க கர்மங்களிலும் , லௌகீக கர்மங்களிலும் ஆனந்தமே .  இத்தகைய மநுஷ்யன் ஸுற்றி உள்ள பலருக்கும் உத்ஸாஹம் மற்றும் ஆனந்தத்தின் ஊற்றாகி விடுகிறார் .

ஆனால் , இத்தகைய நிலை ஸாத்யமா ?  அநந்யாஶ்சிந்தயந்தஹ் ...  நான் இத்தகைய தாய்மார்கள் சிலரை அறிவேன் .  ஶ்லோகங்களைப் பாடிக் கொண்டே ஸமையல் செய்திடுவர் .  ருசி பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இருந்திடாது .  உணவை ஏற்போர் கூறக்கூடிய பாராட்டு அல்லது குறைகளைப் பற்றி பதட்டம் இருந்திடாது .  கார்யபாரத்தைப் பற்றிய அலுப்பு இருந்திடாது .  ஆனந்தமாக , அமைதியாக இருந்திடுவர் .  உத்ஸாஹத்துடன் பணியை ஏற்பர் .  அவர்களது ஸமையல் என்றும் ருசியில் ஏமாற்றியதில்லை .  இவர்கள் ஸமைப்பது அவனுக்காக .  நான் சில வ்யாபாரிகளை அறிவேன் .  கடைக்கு எவரும் வராத நேரங்களில் அமைதியாக அமர்ந்திருப்பர்.  வ்யாபாரத் தொய்வில் கவலையும் கிடையாது .  அதிக வ்யாபாரத்தில் பரபரப்பும் கிடையாது .  கடைக்கு வருவோரை தெய்வ ஸ்வரூபமாகக் காணக் கூடியவர்கள் .  அவஶ்யம் ஏற்படும்போது ஸுறுஸுறுப்பாக வேலை செய்வர் .  வ்யாபாரம் மந்தமாகும் போது , பிரார்தனை செய்தபடி , கீதை படித்த படி அமைதியாக அமர்ந்திருப்பர் .  இவர்கள் வ்யாபாரம் செய்வது அவனுக்காக .  கிடைத்திடும் ஒவ்வொரு பைஸாவும் அவன் பிரஸாதம் .

அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் ..என் சிந்தனையில் மூழ்கி இரு .  வேறு எந்த சிந்தனையும் அல்லாது என் சிந்தனையில் மாத்ரம் மூழ்கி இரு .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...