Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 101


கீதையில் சில சொற்றொடர்கள் - 101


योगक्षेमं वहाम्यहम्  ।  (अध्याय ९ - श्लोक २२)
யோகக்ஷேமம் வஹாம்யஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22)
YogaKshemam Vahaamyaham  ...  (Chapter 9 - Shloka 22)

அர்தம் :  யோகத்தையும் க்ஷேமத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன் .

யோகம் என்றால் அவஶ்யமானதை அருளுவது .  க்ஷேமம் என்றால் இருப்பதைக் காப்பது .  உலக வாழ்க்கையில் இவை ரெண்டு கார்யங்களே (Procurement and Maintenance) நாம் பெரும்பாலும் செய்வது .  பொருட்களை வாங்குகிறோம் .  அவற்றைக் காக்கிறோம் .  சீப்பு , பேனா போன்ற அல்ப விஷயங்களில் இருந்து வண்டி , வீடு என்று பெரிய விஷயங்கள் வரை ... வாங்குகிறோம் .  ஸரியாகப் பயன்பட வேண்டும் எனில் பாதுகாக்கிறோம் .  இவ்விரண்டு கார்யங்களையும் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' , என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

அனைவருக்குமா ?  'வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் என் சிந்தனையில்' லயித்திருப்பவனின் யோகம் மற்றும் க்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன் .

பொதுவாக , தன்னைப் பற்றி சிந்திக்காமல் , அந்யரின் சிந்தனையில் மூழ்கி இருப்போரின் ஸ்வந்த அவஶ்யங்கள் அனைத்தும் , அவரது நாட்டமும் முயற்சியும் இல்லாமல் கவனிக்கப் படுகின்றன .  இது ஸத்யம் .  ஸாதுக்கள் மற்றும் நம் வீடுகளில் தாய்மார்கள் இவ்விஷயத்தில் மிகச் சிறந்த உதாஹரணங்கள் .

ஸாது உணவு , வஸ்த்ரம் , ராத்ரீ ஓய்விடம் போன்ற ஸ்வந்த அவஶ்யங்கள் பற்றிக் கவலைப் படுவதில்லை .  அவர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை .  அவருடைய தேவைகள் அனைத்தும் பூர்தி ஆகின்றன .  இவை பூர்தி ஆவதற்கு எவ்வித ஏற்பாடும் செய்து வைக்கப் படுவதில்லை .  எனினும் பூர்தி ஆகின்றன .

நம் வீட்டில் அம்மா , கார்யத்தில் திளைத்திருந்தால் அக்கார்யம் வீட்டைப் பற்றி இருந்திடும் .  வீட்டில் உள்ளோரைப் பற்றி இருந்திடும் .  அவள் சிந்தனையில் மூழ்கி இருந்தாலும் , சிந்தனை வீட்டைப் பற்றியே இருந்திடும் .  வீட்டில் உள்ளோரைப் பற்றியே இருந்திடும் .  அவள் கார்யம் மற்றும் சிந்தனையில் , 'தான் - தன்னுடைய தேவைகள் - தன்னுடைய கவலைகள்' இருந்திடாது .  அவளுடைய அவஶ்யங்கள் , அவள் நாடாமல் , நினைவு படுத்திடாமல் , formal ஏற்பாடு ஏதும் இல்லாமலே பூர்தி ஆகின்றன .

என் அல்ப வாழ்க்கையில் எனக்கு ஸ்ரீ க்ருஷ்ணனுடைய இந்த வசனத்தை த்ருடப் படுத்தும் அநுபவங்கள் பலமுறை கிடைத்திருக்கின்றன .நான் பணம் ஸம்பாதித்ததில்லை .  பணம் ஸம்பாதிப்பதற்கான எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதில் ஸ்திரமாக இருந்தேன் .  ஸ்வந்த அவஶ்யங்களுக்காக உழைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன் .  ஆனால் , ஸ்ரீ க்ருஷ்ணன் எனக்கு உலகாயத அவஶ்யங்கள் எதிலும் குறை வைக்கவில்லை .  எல்லாம் கொடுத்தான் .  என்னுடைய தகுதியை மீறிக் கொடுத்தான் .

இதில் மற்றொரு நிர்பந்தம் இணைந்திருக்கிறது .  எனக்கு யோகம் எது , க்ஷேமம் எது என்பதை அவன் நிர்ணயிப்பான் .  நான் அடைய வேண்டியது எது , என்னிடம் உள்ளவையில் காப்பாற்றப் பட வேண்டியவை எவை என்பதில் எனக்கு லவ லேஶமும் சாய்ஸ் இருக்கக் கூடாது .  அவை பற்றிய சிந்தனையே என் மனஸில் உதிக்கக் கூடாது .  அவனுக்குத் தெரியும் .  அவன் பார்த்துக் கொள்வான் .  எனக்கு இது வேண்டும் , என்னிடம் உள்ள இது காக்கப் பட வேண்டும் என்று நான் நிர்ணயித்து விட்டு , இதில் உதவிக்கு வர வேண்டும் என்று அவனை அழைத்தால் ... வருவானா ?  வர மாட்டான் .  நிஶ்சயம் வர மாட்டான் .

ஸிந்த் ப்ரதேஶத்தில் மிஹிர் பாபா என்று ஒரு ஸாது இருந்தார் .  ஆன்மீக ப்ரவசனங்கள் செய்து வந்தார் .  அவருடைய மூன்று புதல்வர்களும் ஒரே ஸமயத்தில் அம்மை கண்டு இறந்து விட்டனர் .  ஆன்மீக விஷயங்கள் பேசினாலும் , அவரால் இதை ஏற்க முடியவில்லை .  அழுதார் .  புரண்டார் .  தலையை முட்டி முட்டி புலம்பினார் .  அவருடைய மனைவி , "அவன் கொடுத்தான் .  அவன் கொடுத்ததை , அவனுடையதை , அவன் எடுத்துக் கொண்டான்" , என்றாள் .  அவள் ஆன்மீகம் படித்ததில்லை .  ஆன்மீகம் பேசியதில்லை .  ஆனால் , அவளது இவ்வார்த்தைகள் ஆழமான ஆன்மீக பாவனையை வெளிப்படுத்தின .  மிஹிர் பாபா  தத்க்ஷணம் ஸாதுவாக மாறி விட்டார் .  ப்ரஸங்கத்தில் பேசும் வார்தைகளுக்கு ஏற்ப அவரது பாவனை மாறி விட்டது .

ஸ்ரீ ராமன் கடற்கரையில் அமர்ந்து , அம்புகளை மணலில் புதைத்துக் கொண்டிருந்தார் .  மீண்டும் எடுத்த போது , ஒரு அம்பு முனையில் ஒரு தவளை சிக்கி இருந்தது .  குதறப் பட்டு , ரக்தக் கிளறியாக இருந்தது .  பதறிப் போனார் ஸ்ரீ ராமன் .  "உன் மேல் அம்பு முனைப் பட்டவுடன் ஶப்தம் எழுப்பி இருக்க வேண்டாமா ?" என்றார் .  "ஸ்ரீ ராமா !  நான் பிறந்ததில் இருந்து உன் பெயரைச் சொல்லி வருகிறேன் .  எனக்கு அவஶ்யமான உணவைக் கொடுத்து இருக்கிறாய் .  அதை ஏற்று இருக்கிறேன் .  என் புஷ்டியான தேஹத்தைப் பார் .  இன்று அதே நீ ஒரு அம்பு முனையைக் கொடுக்கும் போது , வேண்டாம் என்று மறுப்பது ஸரியாகுமா ?  புஷ்டியான உணவைக் கொடுத்தது நீ .  அம்பு முனையைக் கொடுத்ததும் நீ .  உணவை உன் ப்ரஸாதமாக ஏற்ற எனக்கு , நீ கொடுக்கும் அம்பு முனையும் ப்ரஸாதமே" , என்றது அந்தத் தவளை .

நமக்கு யோகம் எது , க்ஷேமம் எது என்பதை அவன் நிர்ணயிப்பான் .  "யோக க்ஷேமம் வஹாம்யஹம்" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...