ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 95
वेदेषु यज्ञेषु तपःसु दानेषु यत् पुण्य फलं प्रदिष्टं .. अत्येति तत् सर्वं विदित्वा ... योगी परम् स्थानम् उपैति .. (अध्याय ८ - श्लोक २८)
வேதேஷு யக்ஞேஷு தபஹ்ஸு தானேஷு யத் புண்ய ஃபலம் ப்ரதிஷ்டம் ,,, அத்யேதி தத் ஸர்வம் விதித்வா யோகி பரம் ஸ்தானம் உபைதி ... (அத்யாயம் 8 - ஶ்லோகம் 28)
Vedheshu Yagnyeshu Tapassu Daaneshu Yat Punya Phalam Pradishtam ... Atyeti TatSarvam Viditvaa Yogi Param Sthaanam Upaiti ... (Chapter 8 - Shlokam 28)
அர்தம் : வேதம் படிப்பது , யக்ஞம் செய்வது , தபஸ் இருப்பது , தானம் செய்வது .. இவற்றால் கிடைக்கக் கூடிய புண்ய ஃபலன்களைத் தாண்டி ... யோகி பரம ஸ்தானத்தை அடைகிறான் .
வேதங்கள் புனிதமானவை . பரமனின் குரல் . வேத படனம் நம்மை பரமனுடன் இணைத்திட வேண்டும் . வேதம் படித்திடும் போது பரமனின் ஸ்பர்ஶத்தை நம்மால் உணர முடியணும் . "முடிகிறதா ?" என்பதே கேள்வி . இது ஒரு புண்ய கார்யம் என்று கருதி நாம் வேதங்களைப் படிக்கிறோம் . ப்ராஹ்மணானாக ஜன்மம் எடுத்த எனது கடமை இது என்று நினைத்துப் படிக்கிறோம் . வேத படனம் இவ்வுலகத்தில் அடுத்த உலகத்திலும் உயர்ந்த ஃபலன்களைக் கொடுத்திடும் என்பது நிஶ்சயம் . சிலர் இந்த ஃபலன்களைப் பற்றுடன் எதிர்ப்பார்த்து வேத படனம் செய்திடுவர் . வேதங்கள் பரமனின் ப்ரகடனம் என்ற ஶ்ரத்தை இருக்கிறதா ? அவனை அறிந்திட வேண்டும் , அவனுடன் இணைந்திட வேண்டும் என்ற தாஹம் நம்முள் இருக்கிறதா ?
கீதை பஞ்சம வேதம் , ஐந்தாவது வேதம் எனப்படுகிறது . ஸ்ரீ க்ருஷ்ணன் என்ற ரூபத்தில் ஸ்ரீ பரமனாலேயே பேசப்பட்டது . கீதை ஶ்லோகங்கள் அவனது மதுர அதரங்களை ஸ்பர்ஶித்த படி வெளி வந்துள்ளன . அம்ருதத்திற்கு ஒப்பானவை . ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையின் பதினெட்டாம் அத்யாயத்தில் , "கீதையை அத்யயனம் செய்பவன் , ஶ்ரத்தையுடன் கேட்பவன் , கீதையை என் பக்தர்களிடம் விளக்குபவன் ஆகிய இவர்கள் எனக்கு மிக ப்ரியம் ஆனவர்கள்" என்கிறான் . கீதையைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் பேசும் போதும் நாம் இவ்வாறு உணர்கிறோமா என்பதே கேள்வி ? இது ஒரு ஸத்கர்மம் என்று கருதுகிறோம் . ஸத் கர்மத்திற்கான புண்ய ஃபலன்கள் கிடைத்திடும் . ஸ்ரீ க்ருஷ்ணன் கிடைத்திட மாட்டான் .
பெரும்பாலோர் யக்ஞங்களை வெற்று ஷடங்காகவே செய்கிறோம் . சிலர் ஆழ்ந்த ஶ்ரத்தையுடன் செய்வர் . ஆயின் ஃபலன் மீது பற்று வைத்தே . ஃபலனைத் தனக்காக நாடாமல் இருக்கலாம் . லோக க்ஷேமத்திற்காக யக்ஞங்களைச் செய்திடலாம் . அதனால் இஹ லோகத்திலும் பர லோகத்திலும் புண்ய ஃபலன்கள் கிடைத்திடலாம் . ஃபலன்களுடன் இணைந்திருப்பதால் , யக்ஞங்களும் பரமனைக் காட்டிடாது .
தானம் ஒரு ஸத்கர்மமே . புண்ய ஃபலன்கள் கொடுக்கக் கூடியதே . ஆனால் , தானம் கொடுப்பவரை பிறரிடம் இருந்து பிரித்து விடும் . "நான் கொடுக்கிறேன் . நான் இவர்களது கஷ்டங்களைத் தீர்க்கிறேன்" என்ற உணர்வுடன் தனியே நிற்பார் . நான் என்ற இந்த உணர்வு பரமனுடன் இணைப்பிற்குத் தடையானது .
ஒரு ஸங்கல்பத்தை ஏந்தி , கட்டுப்பாடுகள் விதித்து , எதிர் வரும் எதிர்ப்புகள் , இடர்கள் , கஷ்டங்கள் ஆகியவற்றால் கலங்கிடாமல் உறுதியாக முயற்சி செய்வதே தபஸ் ஆகும் . தபஸ் தெய்வங்களை ஸந்தோஷப் படுத்தி , வரங்களைப் பெற்றுத் தரக்கூடியவை . ஆனால் , பரமாத்மனை நோக்கி நம்மை இட்டுச் செல்லாது . ஏனென்றால் ஸங்கல்பத்தின் ரூபத்தில் ஃபலன்கள் மீது பற்று தபஸின் அங்கம் . ஃபலன்கள் கிடைத்திடும் , பரமன் கிடைக்க மாட்டான் . ஸங்கல்பமும் பற்றும் பரமனின் பாதையில் தடைக்கற்கள் . நாளடைவில் , கட்டுப்பாடுகள் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் , மேலும் மேலும் உக்ரமான கஷ்டங்கள் , இவை ப்ரதானம் ஆகி விடும் . தபஸின் நோக்கமாக எடுத்த ஸங்கல்பத்தை விட , கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பதே நோக்கம் ஆகி விடும் . அதிக கஷ்டம் என்றால் உயர்ந்த தபஸ் என்றாகி விடும் . கஷ்டம் மீது , வலி மீது பற்று ஏற்பட்டு விடும் . ஸுகம் மீது பற்று எவ்வாறு பந்தப் படுத்துமோ , து:கத்தின் மீது பற்றும் அதே அளவு பந்தப்படுத்தும் .
ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் மீண்டும் மீண்டும் , "யோக யுக்தோ பவ" ... "தஸ்மாத் யோகீ பவ" என்கிறான் . நீ யோகீ ஆகி விடு என்கிறான் . யோகீ ஃபலன்களுக்கு அப்பால் யோஜனை செய்பவன் . ஃபலன்களின் கவர்ச்சியில் மயங்கி விடாமல் முன்னேறுபவன் . பரமனை அடைந்து விடுபவன் .
வேதங்கள் புனிதமானவை . பரமனின் குரல் . வேத படனம் நம்மை பரமனுடன் இணைத்திட வேண்டும் . வேதம் படித்திடும் போது பரமனின் ஸ்பர்ஶத்தை நம்மால் உணர முடியணும் . "முடிகிறதா ?" என்பதே கேள்வி . இது ஒரு புண்ய கார்யம் என்று கருதி நாம் வேதங்களைப் படிக்கிறோம் . ப்ராஹ்மணானாக ஜன்மம் எடுத்த எனது கடமை இது என்று நினைத்துப் படிக்கிறோம் . வேத படனம் இவ்வுலகத்தில் அடுத்த உலகத்திலும் உயர்ந்த ஃபலன்களைக் கொடுத்திடும் என்பது நிஶ்சயம் . சிலர் இந்த ஃபலன்களைப் பற்றுடன் எதிர்ப்பார்த்து வேத படனம் செய்திடுவர் . வேதங்கள் பரமனின் ப்ரகடனம் என்ற ஶ்ரத்தை இருக்கிறதா ? அவனை அறிந்திட வேண்டும் , அவனுடன் இணைந்திட வேண்டும் என்ற தாஹம் நம்முள் இருக்கிறதா ?
கீதை பஞ்சம வேதம் , ஐந்தாவது வேதம் எனப்படுகிறது . ஸ்ரீ க்ருஷ்ணன் என்ற ரூபத்தில் ஸ்ரீ பரமனாலேயே பேசப்பட்டது . கீதை ஶ்லோகங்கள் அவனது மதுர அதரங்களை ஸ்பர்ஶித்த படி வெளி வந்துள்ளன . அம்ருதத்திற்கு ஒப்பானவை . ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையின் பதினெட்டாம் அத்யாயத்தில் , "கீதையை அத்யயனம் செய்பவன் , ஶ்ரத்தையுடன் கேட்பவன் , கீதையை என் பக்தர்களிடம் விளக்குபவன் ஆகிய இவர்கள் எனக்கு மிக ப்ரியம் ஆனவர்கள்" என்கிறான் . கீதையைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் பேசும் போதும் நாம் இவ்வாறு உணர்கிறோமா என்பதே கேள்வி ? இது ஒரு ஸத்கர்மம் என்று கருதுகிறோம் . ஸத் கர்மத்திற்கான புண்ய ஃபலன்கள் கிடைத்திடும் . ஸ்ரீ க்ருஷ்ணன் கிடைத்திட மாட்டான் .
பெரும்பாலோர் யக்ஞங்களை வெற்று ஷடங்காகவே செய்கிறோம் . சிலர் ஆழ்ந்த ஶ்ரத்தையுடன் செய்வர் . ஆயின் ஃபலன் மீது பற்று வைத்தே . ஃபலனைத் தனக்காக நாடாமல் இருக்கலாம் . லோக க்ஷேமத்திற்காக யக்ஞங்களைச் செய்திடலாம் . அதனால் இஹ லோகத்திலும் பர லோகத்திலும் புண்ய ஃபலன்கள் கிடைத்திடலாம் . ஃபலன்களுடன் இணைந்திருப்பதால் , யக்ஞங்களும் பரமனைக் காட்டிடாது .
தானம் ஒரு ஸத்கர்மமே . புண்ய ஃபலன்கள் கொடுக்கக் கூடியதே . ஆனால் , தானம் கொடுப்பவரை பிறரிடம் இருந்து பிரித்து விடும் . "நான் கொடுக்கிறேன் . நான் இவர்களது கஷ்டங்களைத் தீர்க்கிறேன்" என்ற உணர்வுடன் தனியே நிற்பார் . நான் என்ற இந்த உணர்வு பரமனுடன் இணைப்பிற்குத் தடையானது .
ஒரு ஸங்கல்பத்தை ஏந்தி , கட்டுப்பாடுகள் விதித்து , எதிர் வரும் எதிர்ப்புகள் , இடர்கள் , கஷ்டங்கள் ஆகியவற்றால் கலங்கிடாமல் உறுதியாக முயற்சி செய்வதே தபஸ் ஆகும் . தபஸ் தெய்வங்களை ஸந்தோஷப் படுத்தி , வரங்களைப் பெற்றுத் தரக்கூடியவை . ஆனால் , பரமாத்மனை நோக்கி நம்மை இட்டுச் செல்லாது . ஏனென்றால் ஸங்கல்பத்தின் ரூபத்தில் ஃபலன்கள் மீது பற்று தபஸின் அங்கம் . ஃபலன்கள் கிடைத்திடும் , பரமன் கிடைக்க மாட்டான் . ஸங்கல்பமும் பற்றும் பரமனின் பாதையில் தடைக்கற்கள் . நாளடைவில் , கட்டுப்பாடுகள் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் , மேலும் மேலும் உக்ரமான கஷ்டங்கள் , இவை ப்ரதானம் ஆகி விடும் . தபஸின் நோக்கமாக எடுத்த ஸங்கல்பத்தை விட , கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பதே நோக்கம் ஆகி விடும் . அதிக கஷ்டம் என்றால் உயர்ந்த தபஸ் என்றாகி விடும் . கஷ்டம் மீது , வலி மீது பற்று ஏற்பட்டு விடும் . ஸுகம் மீது பற்று எவ்வாறு பந்தப் படுத்துமோ , து:கத்தின் மீது பற்றும் அதே அளவு பந்தப்படுத்தும் .
ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் மீண்டும் மீண்டும் , "யோக யுக்தோ பவ" ... "தஸ்மாத் யோகீ பவ" என்கிறான் . நீ யோகீ ஆகி விடு என்கிறான் . யோகீ ஃபலன்களுக்கு அப்பால் யோஜனை செய்பவன் . ஃபலன்களின் கவர்ச்சியில் மயங்கி விடாமல் முன்னேறுபவன் . பரமனை அடைந்து விடுபவன் .
Comments
Post a Comment