Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 105


கீதையில் சில சொற்றொடர்கள் - 105


समोऽहं सर्व भूतेषु , न में द्वेष्योsस्ति न प्रियः  ...  (अध्याय ९ - श्लोक २८)
ஸமோ(அ)ஹம் ஸர்வ பூதேஷு , ந மே த்வேஷ்யோsஸ்தி ந ப்ரியஹ ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 28)
Samo(a)ham Sarva Bhooteshu , Na Me Dweshyo(a)sti Na Priyah  ...  (Chapter 9 - Shlokam 28)

அர்தம் :  ஜீவன்கள் அனைத்தும் எனக்கு ஸமமானவையே .  ஜீவன்களில் எனக்கு வெறுப்பென்றும் ப்ரியம் என்றும் எதுவும் கிடையாது .

தாய்க்குத் தன் குழந்தைகள் அனைவரும் ஸமமானவர்களாகத் தானே இருக்க வேண்டும் ?  ஒரு தாய் தன் ஒரு குழந்தையை த்வேஷித்தும் மற்றொரு குழந்தையை ஸ்நேஹித்தும் பாரபக்ஷம் செய்திடுவாளோ ?  அதே போல , படைத்தவனுக்குத் தன் படைப்புகள் அனைத்தும் ஸமமானவையாகத் தானே இருக்க வேண்டும் ?  "ஜீவன்களில் எனக்கு த்வேஷம் என்றும் ப்ரியம் என்றும் கிடையாது" என்று படைத்தவனான ஸ்ரீ பரமாத்மன் ஏன் சொல்ல வேண்டும் ?

அவனுக்கு ஜீவன்கள் அனைத்தும் ஸமமே .  அவன் எதையும் வெறுப்பதில்லை .  ஸ்நேஹிப்பதும் இல்லை .  ஆனால் , படைப்பில் அனைத்தும் ஸமமாகக் காணப்படவில்லையே ?  எத்தனை வேறுபாடுகள் ?  பொருளாதாரத்தில் , ஆற்றலில் , வாய்ப்புகளில் , புத்தியில் , குணங்களில் , ஶரீர அமைப்பில் , ஆரோக்யத்தில் ...  எண்ணில் அடங்கா வேறுபாடுகள் ... 

சிலர் ஏழையாகவே பிறந்து ஏழையாகவே மறைகின்றனர் .  சிலர் தனவந்தராகப் பிறந்து தனவந்தராகவே மறைகின்றனர் .  இவ்விரண்டு நிலைகளுக்கு மத்தியில் பலப்பல நிலைகள் .  சிலர் ஜன்மத்திலேயே அரிய ஆற்றலுடன் பிறக்கின்றனர் .  ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது .  சிலர் ஆற்றலுடன் பிறந்தும் குடத்தில் இட்ட விளக்கு போல வாழ்ந்து மறைந்து விடுகின்றனர் .  சிலர் விஶேஷ ஆற்றல் எதுவும் இல்லாமலும் உலகத்தில் ஜ்வலிக்கின்றனர் .  சிலர் உழைத்து ஆற்றலை வளர்த்துக் கொள்கின்றனர் .  இதே போல , வாய்ப்புகளிலும் பற்பல வேறுபாடுகள் .  கூர்மையான புத்தி , ஸாதாரண புத்தி , மந்த புத்தி என்று புத்தியில் பலப்பல ஸ்தரங்கள் ...  குணங்கள் அடிப்படையில் ராக்ஷஸ குணம் முதல் தெய்வ குணம் வரை ஆயிரக்கணக்கான வகைகள் ... தோலின் நிறம் , உயரம் , அங்க ஹீனம் .. என்று ஶரீர அமைப்பில் வேறுபாடுகள் .. ஆண் - பெண் என்ற வேறுபாடு .. நித்ய நோயாளி முதல் ஆஜீவன ஆரோக்யம் வரை ஆரோக்யத்தில் பலப்பல நிலைகள் ...  மேற்கூறிய அனைத்தின் பல்வேறு Combinations  ..என்று கோடிக்கணக்கில் வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது இப்படைப்பு .

இத்தனை இத்தனை வேறுபாடுகளைக் காணும் போது , "படைத்தவன் ஒருவனே என்றால் அனைத்தும் ஸமமாக , ஒரே போல பிறந்து , ஸமமான வாய்ப்புகள் பெற்று , ஒரே போன்ற ஸுக - து:கங்களை அநுபவித்து  , வாழ்ந்து மறைய வேண்டும் அல்லவா ?" என்ற சிந்தனை ஏற்படுகிறது .  "இத்தனை வேறுபாடுகள் உள்ளன என்றால் , அனைத்து ஜீவன்களும் அவனுக்கு ஸமம் இல்லை என்றுதானே அர்தம் ஆகிறது ?" என்று தோன்றுகிறது .  "சிலர் ஸுகத்தில் மிதக்கின்றனர் .  சிலர் து:கத்தில் மூழ்குகின்றனர் .  அவ்வாறெனில் , ஸில ஜீவன்கள் அவனுக்கு ப்ரியமானவை , வேறு ஸில ஜீவன்கள் வெறுப்பானவை என்றுதானே அர்தம் ஆகிறது ?" என்ற கேள்வி பிறக்கிறது .

ஸ்ரீ க்ருஷ்ணன் , "இல்லை .  இல்லை .  அனைத்து ஜீவன்களும் எனக்கு ஸமமானவையே .  ஜீவன்களில் எனக்கு த்வேஷம் என்றும் ப்ரியம் என்றும் கிடையாது" , என்கிறான் .பின் , வேறுபாடுகள் ஏன் ?

மழை பொழிகிறது .  மழை அனைவருக்காகவும் தான் பொழிகிறது .  மழைக்கு வெறுப்பென்றும் ப்ரியம் என்றும் கிடையாது .  ஆனால் , வானை நோக்கி வாயைத் திறந்து வைத்திருக்கும் பானை நிரம்புகிறது .  கவிழ்த்து வைக்கப் பட்ட பானை மீது மழை நீர் வழிந்தோடி மறைந்து விடுகிறது .  தூர் வாரப்பட்டு தயாராக இருக்கும் குளங்களும் ஏரிகளும் நிறைகின்றன .  ஆக்ரமிக்கப்பட்டு , புதர் மண்டிக் கிடைக்கும் குளங்களும் ஏரிகளும் நிரம்புவதில்லை .  அதற்கு மேல் , இவை நாஶத்திற்கும் காரணமாகின்றன .  வான் நோக்கி வாயைத் திறந்து வைத்து தபஸ் இருக்கும் சிப்பி , மழைத்துளியை வாங்கி , கடலின் கீழ் மட்டத்தில் தன் தபஸைத் தொடர்ந்து , அழகான முத்தைப் படைக்கிறது .  கவிழ்ந்து கிடக்கும் சிப்பி ?  இந்த வெவ்வேறு விளைவுகளுக்கு மழை பொறுப்பாகுமா ?

ஸூர்யன் ப்ரகாஶிக்கிறான் .  அனைத்து ஜீவன்களுக்காகவும் ப்ரகாஶிக்கிறான் .  அனைவரும் ஒரே அளவில் ஸூர்ய உஷ்ணத்தையும் ப்ரகாஶத்தையும் உபயோகப் படுத்திக் கொள்கின்றனரா ?  இல்லை .  விளைவுகளில் காணப்படும் வேறுபாடுகளுக்கு ஸூர்யன் எவ்வாறு பொறுப்பாவான் ?

ஸ்ரீ பரமனின் பார்வை அனைவர் மீதும் ஸமமாகவே இருக்கிறது .  ஆனால் , இவன் ஸ்ரீ பரமனை நோக்கி இராமல் , அவனுக்கு முதுகைக் காட்டி , உலகத்தை நோக்கித் திரும்பி இருந்தால் ?  கவர்ச்சிகளில் மூழ்கி வாழ்ந்தால் ?

அவனுடைய அநுக்ரஹம் கிடைத்திடும் .  நிஶ்சயம் கிடைத்திடும் .  அதற்கு ஜீவனுடைய முயற்சியும் அவஶ்யம் .  சிறு முயற்சி .  மிகச் சிறிய முயற்சி .  அவனை நோக்கித் திரும்ப வேண்டும் .  அவ்வாறு திரும்பி விட்டால் , துராசாரியும் தத்க்ஷணம் ஸாது ஆகி விடுவான் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .  அடுத்த சொற்றொடரில் பார்ப்போம் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...