ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 111
भजतां प्रीति पूर्वकम ... (अध्याय १० - श्लोक १०)
பஜதாம் ப்ரீதி பூர்வகம் ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 10)
Bhajataam Preeti Poorvakam ... (Chapter 10 - Shlokam 10)
அர்தம் : ஆனந்தமாக பரமனின் சிந்தனையில் மூழ்கி இருத்தல் ...
ஆனந்தமாக மூழ்கி இருத்தல் ... தன்னையும் மறந்து , ஸுற்றி உள்ளோரை மறந்து , ஸுற்றுச் சூழலையும் மறந்தால் ஆனந்தம் . நிகழ் காலத்தில் ஆனந்தமாக இருக்கிறேன் , ஆனந்தத்தை அநுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது . (அந்நிலை மாறிய பிறகு ஆனந்தமாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்) . தூய்மையான மனஸ் கொண்ட பாக்யஶாலி ஆனந்த நிலையை எய்திடுவான் . மனஸில் எதிர்ப்பார்ப்பு ஏந்தியவன் , அழுக்குகளை ஸுமந்தவன் , திறமைஶாலியாக இருக்கலாம் . ஆனந்தத்தில் மூழ்க முடியாது .
நம் ஹிந்து பாரம்பர்யத்தில் ப்ரசாரம் என்பது கிடையாது . கலைத் துறைகளில் உன்னத ஸாஹித்யங்களைப் படைத்தவன் , யுகங்களைத் தாண்டி நின்றிடும் சிறந்த ஆலயங்களையும் கட்டடங்களையும் எழுப்பியவன் , வேத உபநிஷத ர்சாக்களை வெளிப்படுத்தியவன் , விக்ஞான ஆஶ்சர்யங்களைக் கண்டு பிடித்தவன் , ஶ்ரேஷ்டமான காவ்யங்களை வடித்தவன் , ஆன்மீக ரஹஸ்யங்களைக் கண்டறிந்தவன் , மற்ற பல்வேறு துறைகளில் சிறந்த படைப்புகளில் பங்காற்றியவர் ... என்ற இவர்களில் எவரும் அந்தந்த படைப்புடன் தத்தம் பெயரை இணைத்துக் கொள்ளவில்லை . ஆனந்தமாக மூழ்கினர் . அத்புதமான படைப்புகளை வெளிப்படுத்தினர் . காலத்தைத் தாண்டி நின்றன அவர்களது படைப்புகள் .
பாராட்டப் பட வேண்டும் , தன் பெயர் சொல்லப் பட வேண்டும் , கூட்டம் சேர வேண்டும் , ஜய கோஷம் எழுப்ப வேண்டும் , தன் கருத்திற்கு எண்ணிக்கை பலம் சேர வேண்டும் , போன்ற விருப்பங்கள் மனஸில் துளிர்த்து விட்டால் , படைத்தலை விட , நான் படைத்தேன் என்பதை ப்ரகடனம் செய்வதில் அதிக கவனமும் ப்ரயத்னமும் இருந்திடும் . ஆனந்தத்தில் மூழ்குதல் மறைந்து விடும் .
அதிலும் , ஸ்ரீ பரமாத்மனை பஜிப்பதில் ப்ரசாரம் என்பதற்கு லவலேஶமும் இடம் கிடையாது . தனது இறை அநுபவங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளல் ஆகாது என்று தடுக்கிறது தர்ம ஶாஸ்த்ரம் . இந்தத் துறையில் ப்ரசாரம் புகுந்து விட்டால் போட்டி , பொறாமை , சதி , வஞ்ஜகம் , ஹிம்ஸை , மற்றவரைத் தம் வழிக்கு மாற்றிட பலவந்த முயற்சிகள் , மாற மறுப்போரை ஒழித்துக் கட்ட சதித் திட்டங்கள் , என்று அனைத்து விதமான கொடும் செயல்களும் உடன் வந்து விடும் . இறை ஆனந்தத்தில் , பரமானந்தத்தில் , பரவஶ நிலையில் திளைப்பது என்ற அநுபவம் கிடைத்திடாது . க்றிஸ்தவமும் இஸ்லாமும் தோன்றி பல நூற்றாண்டுகளில் உயர்ந்த மஹான்களை பிறப்பிக்கவில்லை . காரணம் அவற்றைப் பின்பற்றுபவர்கள் இறைத் தேடலில் , இறை ஆனந்தத்தில் மூழ்கவில்லை . மாறாக ப்ரசாரத்தில் மூழ்கினர் . அதே போல , மஹான் ஒருவர் கூறிய வழியில் நடப்பதற்காக நிறுவப்பட்ட அமைப்புகளும் பண பலத்தில் ப்ரசாரம் செய்கின்றன . கூட்டங்கள் போடுகின்றன . பிரஸுரங்களை விநியோகம் செய்கின்றன . பெரும் ஶப்தத்தை எழுப்புகின்றன . போஸ்டர்கள் , தோரணங்கள் மூலம் உலகத்துக் குப்பையில் மேலும் குப்பை சேர்க்கின்றன . ஆனால் , அந்த மஹானுக்கு ஸமமான மற்றொரு மஹானை உருவாக்குவதில்லை என்பது ஸத்யம் .
பக்தன் ஆனந்தத்தில் மூழ்குகிறான் . பரமானந்த நிலையில் ஸ்ரீ பகவானை பஜிக்கிறான் .
Comments
Post a Comment