Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 116


கீதையில் சில சொற்றொடர்கள் - 116


रुद्राणां शङ्करश्चास्मि  ... (अध्याय १० - श्लोक २३)
ருத்ராணாம் ஶங்கரஶ்சாஸ்மி  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 23)
Rudraanaam Shankaraschaasmi  ... (Chapter 10 - Shlokam 23)

அர்தம் :  ருத்ரர்களில் ஶங்கரன் நான் ...

ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறான் ...  "ருத்ரர்களில் நான் ஶங்கரன்" ... ருத்ரர்கள் யாவர் ?  அவர்களில் ஶங்கரன் யார் ?  என்றெல்லாம் அறிவதற்கு முன்னர் அடிப்படையான ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தனை செய்வோம் .

ஸாதாரண மநுஷ்யர்களான நமக்கு ஶிவன் , ஶங்கரன் , ருத்ரன் எல்லாம் ஒன்றுதான் . ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு  ஶங்கரன் நான் என்கிறான் .  ஶங்கரன் என் அடியாள் , ஶங்கரன் எனக்கு ஜூனியர் என்றெல்லாம் சொல்லவில்லை .  சில ஸ்ரீ க்ருஷ்ண பக்தி இயக்கங்கள்  ஶங்கரனை "Demi God" (சிறு தெய்வம்) என்கின்றன .

அத்வைதம் இணைக்கிறது .  அனைத்தும் ஒன்றே என்கிறது .  ஒன்றைப் பார்க்கத் தூண்டுகிறது .  மற்ற கருத்துக்கள் பிரிக்கின்றன .  இது வேறு , அது வேறு என்ற பார்வையைத் தூண்டுகின்றன .  அவனுடைய பெயரை வைத்துக் கொள்ளாதே .  அவனுடைய ஆலயத்திற்குச் செல்லாதே .  அவனைப் பற்றிய புஸ்தகங்களைப் படிக்காதே என்றெல்லாம் கூறி தன்னை மற்ற அனைவரிடம் இருந்தும் பிரித்து வாழத் தூண்டுகின்றன .  நான் கீதை ப்ரசாரத்தில் தமிழக க்ராமங்களுக்குச் சென்ற போது , ஶிவகாஶி அருகில் ஒரு க்ராமத்தில் ஒரு வைஷ்ணவர் வீட்டில் தங்கி இருந்தேன் .  மூன்றாவது தினம் அவர் ஒரு கேள்வி கேட்டார் .  "நீங்கள் விபூதி தரித்து கீதை பேசுகிறீர்களே" ?  மூன்று தினங்களாக இந்தக் கேள்வி அவர் மனஸை உறுத்தி இருக்கிறது .  "எனக்கு வேதம் தான் ஸர்வோபரி .  வேதத்தில் விபூதி மாத்ரம் தான் குறிப்பிடப் பட்டுள்ளது .  மற்றவை எல்லாம் பின்னர் வந்தவை" என்றேன் .  விபூதி என்பது ஶிவன் இல்லை .  விபூதி அல்லது பஸ்மம் நம் தேஶத்தின் பற்பல ஸமுதாயங்களைப் பிணைத்திடும் பாலம் .

அத்வைதம் மாத்ரமே ஸமுதாயத்தில் ஆரோக்யமான சூழ்நிலையை, ஸௌஹார்தமான இணக்கமான உறவுகளை வளர்க்க ஹேதுவானது .  ஶைவம் , வைஷ்ணவம் என்பதெல்லாம் தனிப்பட்ட ஆராதனைக்கு பாதைகள் .  அனைத்துப் பாதைகளிலும் ஒருவர் செல்ல வேண்டும் என்பது அவஶ்யம் இல்லை .  தனக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து , ஶ்ரத்தையுடன் அந்த ஒரே பாதையில் செல்வதுதான் சரி .  ஆனால் , அனைத்தும் ஒன்றே என்ற பார்வைதான் ஆதாரம் .

இந்தப் பின்னணியில் பார்க்கும் போது , 2,500 வர்ஷங்கள் முன்னர் பாரதத்தில் அவதரித்த மஹாத்மா ஆதி ஶங்கரனின் மஹத்வம் புரிகிறது .  ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றி அவர் படைத்த ஶ்லோகங்களினும் அழகானவை , மதுரமானவை , அவருக்குப் பின்னர் எழுதப் பட்டனவா என்பது ஸந்தேஹமே ..  அவர் வேத உபநிஷதங்களுக்கும் பாஷ்யம் எழுதினார் .  கீதைக்கும் எழுதினார் .  ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கும் எழுதினார் .  அவரைப் பின்பற்றும் ஸமுதாயம் ஶிவராத்ரீயையும் அநுஷ்டிக்கிறது .  தேவி நவராத்ரீயையும் அநுஷ்டிக்கிறது .  ஸமமான பக்தி ஶ்ரத்தையுடனும் , உத்ஸாஹத்துடனும் ஸ்ரீ ராம நவமி , ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டமியையும் கொண்டாடுகிறது .

கீதையில் ஒரு அத்வைத ஸாரமே ..  இந்த திஶையில் ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வாக்யம் அத்புதமானது .  ருத்ரர்களில் ஶங்கரன் நானே ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...