Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 153


கீதையில் சில சொற்றொடர்கள் - 153


सन्नियम्येन्द्रिय ग्रामम्  ...  (अध्याय १२ - श्लोक ४)
ஸந்நியம்யேந்த்ரிய க்ராமம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4)
Sanniyamyendriya Graamam ...  (Chapter 12 - Shlokam 4)

அர்தம் :  இந்த்ரியக் கூட்டத்தை நியமப் படுத்தி ...

இந்த்ரிய க்ராமம் என்பது இந்த்ரியங்களின் ஸமூஹம் ..  இந்த்ரியங்கள் ஒவ்வொன்றும் விஶேஷமானவை ..  ஒவ்வொன்றின் கார்யமும் தனித்தனியானவை ..  ஆனால் , அனைத்து இந்த்ரியங்களும் புற உலகத்து விஷயங்களின் விவரங்களை உள்ளே கொண்டு வருபவை ..  புற உலகத்து விஷயங்களுடன் உறவாடி , தாம் பெற்ற அநுபவங்களை உள்ளே கொண்டு வருபவை ..  அதனால் இவற்றை ஒரு ஸமூஹமாக , இந்த்ரிய க்ராமமாக அறிவிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

இந்த்ரியங்களை செவ்வனே நியமப் படுத்தி ..  நிர்குண நிராகார உபாஸனையில் இதை முதல் நிபந்தனையாகக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  குணங்களற்ற , உருவம் அற்ற பரப்ரஹ்ம பரமாத்மனை எவ்வாறு உபாஸனை செய்வது ?  நம்மிடம் இருப்பதோ கால தேஶ எல்லைக்கு உட்பட்ட ஶரீரம் ..  நம்மிடம் இருக்கும் மற்ற கரணங்களான இந்த்ரியங்களும் வரம்பிற்கு உட்பட்ட ஆற்றல் கொண்டவை ..  அவற்றால் உருவம் கொண்டவற்றையும் (ஸாகார) , குணங்கள் கொண்டவற்றையுமே அறிய முடியும் ..  கண் உருவங்களைப் பார்த்திடும் .  அல்லது நிறங்களைப் (நிறம் விஷயங்களின் குணங்களில் ஒன்று.) பார்த்திடும் ..  அதே போல , மற்ற இந்த்ரியங்களும் ..  பரப்ரஹ்ம பரமாத்மனோ வரம்பற்றவன் ..  எங்கும் வ்யாபித்திருப்பவன் ..  அனைத்தையும் இயக்கிடும் ஆற்றலாக ஸூக்ஷ்மமாக இருப்பவன் ..  அனைத்திலும் இருந்தும் இல்லாதிருப்பவன் ..  சிந்தனைக்கும் வர்ணனைக்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்டவன் ..  வரம்பிற்கு உட்பட்ட ஶரீரத்தாலோ , உருவங்களையும் குணங்களையும் மாத்ரம் அறிய வல்ல இந்த்ரியங்களால் பரப்ரஹ்ம பரமாத்மனை உபாஸிப்பது எங்ஙனம் ?  அறிவது எங்ஙனம் ??  இந்த்ரியங்களை நியமப் படுத்துவது , தத்தம் கார்யங்களில் இருந்து விலக்குவது , ஒரு வகையில் அவற்றைச் செயலிழக்கச் செய்வது ..  நிர்குணத்தை அறிவதற்கு முதல் நிபந்தனை ஆகி விடுகிறது ..  இதையே அதிகக் கஷ்டமானது , க்லிஷ்டமானது என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

ஸகுண ஸாகார உபாஸனையில் , குணங்களுடன் கூடிய உருவத்தை வணங்கிடும் போது , இந்த்ரியங்களைப் பற்றி கவலைப் படத் தேவை இல்லை ..  இந்த்ரியங்களை வஶப் படுத்துதல் பற்றியும் கவலை வேண்டாம் ..  பரமாத்மனையே உருவம் உள்ளவனாய் , குணங்கள் உள்ளவனாய் , வரம்பிற்கு உட்பட்டவனாய் ஸுருக்கி விடுகிறோம் ..  இந்நிலையில் அவனுடன் உறவு கொள்வது ஸுலபமாகி விடுகிறது ..  அவனைத் தொட முடிகிறது ..  அவனைக் குளிப்பாட்டி அலங்கரிக்க முடிகிறது ..  அவனுடன் பேச முடிகிறது ..  அவனுக்காக அழ முடிகிறது ..  அவனுக்காகப் பாட முடிகிறது , ஆட முடிகிறது ..  அவனுக்கு போஜனம் ஊட்ட முடிகிறது ..  தாலாட்டுப் பாடி உறங்க வைக்க முடிகிறது ..  இந்த்ரியங்களை நியமப் படுத்துதல் என்பது ஒரு தனிக் கார்யம் ஆவதில்லை ..  உபாஸனைக்கு ஒரு நிபந்தனை இல்லை ..  உபாஸனையின் விளைவாக இந்த்ரிய நியமனம் தன்னால் நேர்ந்து விடுகிறது ..  இந்த்ரியங்களுக்கு வேறு எதுவும் ருசிப்பதில்லை ..  கண்களுக்கு அவனது உருவம் , காதுகளுக்கு அவனது நாமம் மற்றும் கீர்தி , நாவிற்கு அவன் ப்ரஸாதம் , கால்களுக்கு அவன் ஆலயம் , கைகளுக்கு அவன் அலங்காரம் ..  இந்த்ரியங்கள் மற்ற "கவர்ச்சிகரமான" உலக விஷயங்களை நாடுவதில்லை ..  விஶேஷ ப்ரயத்னம் இல்லாமலே இந்த்ரியங்கள் நியமப்பட்டு விடுகின்றன ..   அதனால்தான் ஸகுண ஸாகார உபாஸனை ஸுலபமானது என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...