Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 178


கீதையில் சில சொற்றொடர்கள் - 178


सर्वतः पाणिपादं तत्सर्वतोSक्षि शिरोमुखम् सर्वतः श्रुतिमल्लोके ...  (अध्याय १३ - श्लोक १३)
ஸர்வதஹ பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷி ஶிரோமுகம் ஸர்வதஹ ஶ்ருதிமல்லோகே  ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 13)
Sarvatah PaaniPaadam Sarvatah Shiromukham Sarvatah ShrutiMalloke  ..  (Chapter 13 - Shlokam 13)

அர்தம் :  அவன் ஸர்வ இடங்களிலும் கைகளையும் , பாதங்களையும் கண்களையும் முகங்களையும் , வாய்களையும் , காதுகளையும் கொண்டவன் ..

இது நிராகார ஸகுண பரமாத்மாவின் வர்ணனை ..  இதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நிர்குண நிராகார பரமாத்மாவின் வர்ணனை ஸ்ரீ க்ருஷ்ணனால் செய்யப்பட்டது ..  இதுதான் ஹிந்து தர்மத்தின் பலம் ..  ஹிந்து தர்மம் தன்னுள் உலகத்து எந்த ஒரு உபாஸனை முறையையும் அரவணைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது ..  அனைத்து மதங்களும் , பரமாத்மனைப் பற்றிய அனைத்து கருத்துக்களும் ஹிந்து தர்மத்தில் அடங்கும் ..  கருத்து , இறைதூதன் , வழிபாட்டு முறை என்ற விஷயங்களில் ஹிந்து தர்மம் தன்னை குறுகிய வட்டங்களுக்குள் ஸுருக்கிக் கொள்ளவில்லை ..  கால வரம்புக்குள் சிக்கவில்லை ..  தேஶம் , ஸமுதாயம் என்ற வரம்புகளுக்கு அப்பால் அனைத்து காலங்களிலும் அனைத்து தேஶங்களிலும் , அனைத்து ஸமுதாயத்தினருக்கும் பொருந்தக் ஹிந்து தர்மம் ..

ஸ்ரீ பரமாத்மன் அனைத்து இடங்களிலும் தனது கைகள் , பாதங்கள் , கண்கள் , காதுகள் , முகங்கள் மற்றும் வாய்களைக் கொண்டவர் ..  பக்தனின் பாவனைதான் முக்யம் ..  பரம பாவனையில் திளைத்த பக்தன் எந்த இடத்திலும் , எதைக் கொடுத்தாலும் , அதை ஏற்றுக் கொள்ள ஸ்ரீ பரமனின் கைகள் அங்கு இருந்திடும் ..  பக்தன் ஸ்ரீ பரமனுக்கு இது' என்று வெறும் ஒரு விருப்பத்தை மனஸில் நினைத்தாலும் , அதையும் ஏற்றுக் கொள்ள , ஸ்ரீ பரமனின் கைகள் அங்கும் (மனஸினுள்) இருந்திடும் ..  ஒரு பக்தன் தடுமாறினால் , அவனைத் தாங்கிட , ஷீ பரமனின் கைகள் அருகிலேயே இருந்திடும் ..

ஒரு பக்தன் பக்தியுடன் ஶிரம் தாழ்ந்து , பணிந்து எங்கு வணங்கினாலும் , அவனுடைய வணக்கத்தை ஏற்றுக் கொள்ள ஸ்ரீ பரமனின் பாதங்கள் அங்கே இருந்திடும் ..  ஒரு பக்தன் ஸ்ரீ பரமனது முகத்தைப் பார்க்க விரும்பினால் , அங்கு அதே இடத்தில் புன்னகையுடன் கூடிய ஸ்ரீ பரமனது முகம் பக்தனை வாழ்த்திக் கொண்டிருக்கும் ..  ஸ்ரீ பரமானது கண்கள் அனைத்து இடங்களிலும் இருக்கும் , பக்தனைக் கண்காணித்த படி , அவனை விழாமல் காத்த படி ..  அவனது கண்கள் பக்தனின் மனஸின் அடியாழத்தில் புதைந்திருக்கும் ரஹஸ்ய பாவனைகளையும் கண்டு அறிந்திடும் ..  குசேலன் , விதுரனைப் போல பக்தன் ஸ்ரீ பரமனுக்கு ப்ரேம பாவனையுடன் ஊட்ட விரும்பினால் , அங்கு , அதே இடத்தில் ஸ்ரீ பரமனின் வாய்கள் இருந்திடும் ..  பக்தனது ப்ரார்தனைகள் , ஏன் !  அவனது மனஸில் இருக்கும் பேசப்படாத அவனது விருப்பங்களையும் கேட்கவல்ல ஸ்ரீ பரமனின் காதுகள் ஸர்வ இடங்களிலும் உள்ளன ..  புருஷ ஸூக்தம் ஸஹஸ்ர ஶீர்ஷா புருஷஹ ஸஹஸ்ராக்ஷஹ ஸஹஸ்ர பாத் .. என்று ஆரம்பிக்கிறது ..  ஸ்ரீ பரமன் ஸர்வ வ்யாபி ..  பக்தர்களுக்காக தத் க்ஷணம் வந்து விடுபவன் , தனது ஆயிரக் கணக்கான கரங்கள் , பாதங்கள் , கண்கள் , காதுகள் , முகங்கள் , வாய்கள் , மூலம் பக்தனை அடைந்து விடுபவன் ..  அவனைக் காத்திட , அவனைக் கண்காணித்திட , அவனுக்கு அருளிட , அவனிடம் இருந்து ஸ்வீகரித்திட , அவன் விருப்பத்தைக் கேட்டிட ..

ஸ்ரீ பரமன் தோலை தூரத்தில் கைலாஷ பர்வதத்திலும் , ஸ்ரீ வைகுண்டத்திலும் இருக்கிறார் என்பது ஸத்யம் ..  ஸந்தேஹம் எதுவும் இல்லை ..  ஆனால் , உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கிறார் ..  எந்த இடத்திலும் , எந்த க்ஷணத்திலும் பக்தனை நினைத்த மாத்ரத்தில் வந்தடைகிறார் ..  ஒலியை விட வேகமாக ஒளி ப்ரயாணிக்கும் ..  இறை அநுக்ரஹம் ஒலியை விட வேகமாக வரக் கூடியது ..  துர்யோதனனின் ராஜ்ய ஸபையில் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்த த்ரௌபதி , தனது கைகளை உயர்த்தி , 'ஹே பரந்தாமா !' என்று அழைத்த மாத்ரத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் அங்கு  இருந்தான் , புடவைகள் ரூபத்தில் ..  நெடுந்தூர த்வாரிகையில் இருந்து ப்ரயாணம் செய்ய வேண்டிய அவஶ்யம் அவனுக்கு இல்லை ..  ஆரண்யத்தில் த்ரௌபதி மீண்டும் சிக்கலில் மாட்டிய போது , அவள் ஸ்ரீ க்ருஷ்ணனை நினைத்த தத் க்ஷணத்தில் வீட்டு வாஸலில் இருந்தான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  துர்வாஸர் மற்றும் அவரது ஆயிரம் ஶிஷ்யர்களுக்கும் வயிறாற போஜனம் அளித்து த்ரௌபதியைச்  சிக்கலில் இருந்து மீட்டான் ..  கஜேந்த்ரன் முதலையின் வாய்ப்பிடியில் சிக்கித் தவித்த போது , "ஹே அச்யுதா !" என்று கூவி அழைத்த தத் க்ஷணம் ஸ்ரீ மஹாவிஷ்ணு அங்கிருந்தார் , யானையைக் காத்து அருளிட ..

"ஸர்வதஹ பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷி ஶிரோமுகம் ஸர்வதஹ ஶ்ருதிமல்லோகே !!!"

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...